பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | உன்னி மேனன், மனோ & கே.எஸ். சித்ரா | ஏ.ஆர்.ரகுமான் | திருடா திருடா |
Veerapandi Kotayyile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
ஊரும் ஆறும் தூங்கும் போது…
பூவும் நிலவும் சாயும் போது…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…
—BGM—
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மை இருட்டு வேளையிலே…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
வளைவி சத்தம் இதயம் திருடியதே…
பெண் : வீரபாண்டி கோட்டையிலே…
வெள்ளி முளைக்கும் வேளையிலே…
பருவப்பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே…
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ…
ஆண் : வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு…
தங்க செருப்ப தாரேன் கனி வாழை காலுக்கு…
ஆண் : பவளங்கள் தாரேன் பால் போன்ற பல்லுக்கு…
முத்து சரங்கள் தாரேன் முன் கோவச்சொல்லுக்கு…
பெண் : உன் ஆசை எல்லாம்…
வெறும் கானல் நீரு…
நீ ஏழம் போட வேறாளப் பாரு…
ஆண் : நீ சொல்லும் சொல்லுக்குள்ள…
என் பொழப்பு வாழும் புள்ள…
நீ போட்ட வெத்தலைக்கு…
என் நாக்கு ஊரும் புள்ள…
—BGM—
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மை இருட்டு வேளையிலே…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
வளைவி சத்தம் இதயம் திருடியதே…
—BGM—
பெண் : ரெட்டை சூரியன் வருகுதம்மா…
ஒற்றை தாமரை கருகுதம்மா…
—BGM—
பெண் : வாள்முனையில் ஒரு சுயவரமா…
மங்கைக்குள் ஒரு பயம் வருமா…
பெண் : ஒரு தமயந்தி நானம்மா…
என் நல ராஜன் யாரம்மா…
ஆண் : மணவாளன் இங்கே நானம்மா…
மஹாராஜன் இங்கே நானம்மா…
பெண் : இது மாலை மயக்கம்…
என் மனதில் நடுக்கம்…
நெஞ்சில் வார்த்தை துடிக்கும்…
நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா…
ஊமைகிளி என்ன சொல்லும்…
ஆண் : நீசொல்லும் சொல்லுக்குள்ள…
என் பொழப்பு வாழும் புள்ள…
நீ போட்ட வெத்தலைக்கு…
என் நாக்கு ஊரும் புள்ள…
—BGM—
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மை இருட்டு வேளையிலே…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
வளைவி சத்தம் இதயம் திருடியதே
—BGM—
ஆண் : நீசொல்லும் சொல்லுக்குள்ள…
என் பொழப்பு வாழும் புள்ள…
நீ போட்ட வெத்தலைக்கு…
என் நாக்கு ஊரும் புள்ள…
—BGM—
பெண் : வீரபாண்டி கோட்டையிலே…
வெள்ளி முளைக்கும் வேளையிலே…
பருவப்பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே…
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ…
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
காடும் மழையும் தூங்கும்போது…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…
Notes : Veerapandi Kotayyile Song Lyrics in Tamil. This Song from Thiruda Thiruda (1993). Song Lyrics penned by Vairamuthu. வீரபாண்டி கோட்டையிலே பாடல் வரிகள்.