| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | கே.ஜே. யேசுதாஸ் | கங்கை அமரன் | வாழ்வே மாயம் |
Vazhvey Maayam Song Lyrics in Tamil
ஆண் : வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…
தரை மீது காணும் யாவும்…
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா…
ஆண் : யாரோடு யார் வந்தது…
நாம் போகும்போது யாரோடு யார் செல்வது…
ஆண் : வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…
—BGM—
ஆண் : யார் யார்க்கு என்ன வேஷமோ…
இங்கே யார் யார்க்கு எந்த மேடையோ…
ஆடும் வரைக் கூட்டம் வரும்…
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்…
ஆண் : தாயாலே வந்தது தீயாலே வெந்தது…
தாயாலே வந்தது தீயாலே வெந்தது…
மெய் என்று மேனியை யார் சொன்னது…
ஆண் : வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…
—BGM—
ஆண் : பிறந்தாலும் பாலை ஊற்றுவார்…
இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்…
உண்டாவது ரெண்டாலதான்…
ஊர்போவது நாலாலதான்…
ஆண் : கருவோடு வந்தது தெருவோடு போவது…
கருவோடு வந்தது தெருவோடு போவது…
மெய் என்று மேனியை யார் சொன்னது…
ஆண் : வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…
—BGM—
ஆண் : நாடகம் விடும் நேரம்தான்…
உச்சக் காட்சி நடக்குதம்மா…
—BGM—
ஆண் : வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும்…
வேலை நெருங்குதம்மா…
—BGM—
ஆண் : பாதைகள் பல மாறியே…
வந்த பயணம் முடியுதம்மா…
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை…
நோய் கொண்டு போகும் நேரமம்மா…
Notes : Vazhvey Maayam Song Lyrics in Tamil. This Song from Vazhvey Maayam (1982). Song Lyrics penned by Vaali. வாழ்வே மாயம் பாடல் வரிகள்.

