பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | பிரம்மா |
Varudhu Varudhu Song Lyrics in Tamil
பெண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…
இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…
ஆண் : சிறகு முளைத்த கிளி போலே…
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே…
தனிமை நினைவு இனி ஏது…
ஒரு தலைவன் தழுவ வரும்போது…
பெண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…
இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…
—BGM—
ஆண் : நாடியெங்கும் ஓடிச்சென்று…
நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே …
பெண் : நேசம் என்னும் நெய்யைவிட்டு…
நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே …
ஆண் : தோளில் உனை தாங்குவேன்…
இதழ் தேனைதினம் வாங்குவேன்…
பெண் : கேளு பரிமாறுவேன்…
அதில் நானும் பசியாறுவேன்…
ஆண் : பாலும் தேனும் தீர தீர ஊறுமா…
பெண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…
ஆண் : இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…
—BGM—
பெண் : ஊரைச் சுற்றும் தேரும் இன்று…
சேரும் இடம் சேராமல் வாடுதே…
ஆண் : தேவன் வந்தான்தேரைக்கண்டு…
சோகம் இனி சொல்லாமல் ஓடுமே…
பெண் : நாளை சுப வேளைதான்…
அதில் கூடும் மணமாலைதான்…
ஆண் : நாளும் புது லீலைதான்…
இனி ஏது இடைவேளைதான்…
பெண் : ஆடல் பாடல் ஆவல் தீர காணலாம்…
ஆண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…
இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…
பெண் : சிறகு முளைத்த கிளி போலே…
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே…
தனிமை நினைவு இனி ஏது…
ஒரு தலைவன் தழுவ வரும்போது …
ஆண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…
பெண் : இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…
Notes : Varudhu Varudhu Song Lyrics in Tamil. This Song from Bramma (1991). Song Lyrics penned by Vaali. வருது வருது பாடல் வரிகள்.