பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | பிரம்மா |
Engiruntho Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்…
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்…
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்…
ஆண் : தட்டிவிட்டேன் மனக்கதவை…
திறந்து பார்க்க விரைந்து வா…
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்…
கொண்ட சஞ்சலங்கள் மறைய…
ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்…
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்…
—BGM—
ஆண் : நீங்காமல்தானே நிழல்போல நானே…
வருவேன் உண் பின்னோடு எந்நாளுமே…
பூப்போன்ற மனதை பொல்லாத மனதாய்…
தவறாக எடைபோட்டு சென்றாலும்தான்…
ஆண் : பாலைப்போல கள்ளும் கூட வெண்மையானது…
பருகிடாது விளங்கிடாது உண்மையானது…
நீயும் காணக்கூடும் இங்கு ஓர் தினம்…
இந்த பால் மனம்…
ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்…
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்…
—BGM—
ஆண் : பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு…
மறைத்தாலும் என் கண்கள் ஏமாறுமா…
புரியாத புதிரா விளங்காத விடையா…
இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா…
ஆண் : என்னைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லையே…
வேலி மீது குற்றம் சொன்ன தோட்டம் இல்லையே…
நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும்…
அந்த நாள் வரும்…
ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்…
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்…
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்…
ஆண் : தட்டிவிட்டேன் மனக்கதவை…
திறந்து பார்க்க விரைந்து வா…
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்…
கொண்ட சஞ்சலங்கள் மறைய…
ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்…
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்…
Notes : Engiruntho Song Lyrics in Tamil. This Song from Bramma (1991). Song Lyrics penned by Vaali. எங்கிருந்தோ இளங்குயிலின் பாடல் வரிகள்.