வண்ண வரைகோல்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஹரிப்ரியாஇளையராஜாநினைவெல்லாம் நீயடா

Vanna Varaikolkal Song Lyrics in Tamil


BGM

பெண் : வண்ண வரைகோல்கள்…
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ…
தோன்றும் அவன் தோற்றம்…
என்னை அதில் இணைய அழைப்பதேனோ…

பெண் : விண்மீன் உலகில் நிலவாய்…
விழிகள் விரும்பும் கனவாய்…
மெளனம் பேசும் கவியாய்…
காதல் வந்ததே அழகாய்…

பெண் : அவனால் எனக்குள் வந்தது மாற்றம்…
சரியா இதுதான் சரியா…
எல்லாமே அழகாச்சே அவனாலே…
என்னை நான் மறந்தேனே எதனாலே…

பெண் : வண்ண வரைகோல்கள்…
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ…
தோன்றும் அவன் தோற்றம்…
என்னை அதில் இணைய அழைப்பதேனோ…

BGM

பெண் : வானவில் எந்தன் அருகில் இரவில் வந்து…
வந்துபோவதென்ன மாயமோ…
வாசலில் வரையும் வண்ண கோலங்கள்…
மலர்கள் விரிப்பதென்ன மாயமே…

பெண் : நேற்று வரையில் அதிசயங்கள் நிகழந்ததில்லை…
இதயத் திரையில் ரகசியங்கள் எதுவுமில்லை…
சொல்ல முடியாத ஆசைகள்…
வந்து வந்து வளைத்து வளைத்து தொல்லை தருதே…

பெண் : வண்ண வரைகோல்கள்…
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ…
தோன்றும் அவன் தோற்றம்…
என்னை அதில் இணைய அழைப்பதேனோ…

BGM

பெண் : கேட்கும் நாதங்கள் தந்த கீதங்கள்…
உயிரில் உயிராகி கலந்ததே…
யாரும் கேட்காத நினைத்து பாக்காத…
இன்ப அதிர்வலைகள் எழுந்ததே…

பெண் : கேட்க கேட்க இதயங்களை இழுத்து போடும்…
காலம் கடந்து வேருலகம் அழைத்து போகும்…
இசையில் என்னோடு கலந்தவன்…
இதயக் கதவை அவனுக்காக திறந்து வைத்தேன்…

பெண் : வண்ண வரைகோல்கள்…
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ…
தோன்றும் அவன் தோற்றம்…
என்னை அதில் இணைய அழைப்பதேனோ…

பெண் : விண்மீன் உலகில் நிலவாய்…
விழிகள் விரும்பும் கனவாய்…
மெளனம் பேசும் கவியாய்…
காதல் வந்ததே அழகாய்…

பெண் : இவனால் எனக்குள் வந்தது மாற்றம்…
சரியா இதுதான் சரியா…
எல்லாமே அழகாச்சே அவனாலே…
என்னை நான் மறந்தேனே எதனாலே…

பெண் : எல்லாமே அழகாச்சே அவனாலே…
என்னை நான் மறந்தேனே எதனாலே…


Notes : Vanna Varaikolkal Song Lyrics in Tamil. This Song from Ninaivellam Neeyada (2024). Song Lyrics penned by Snegan. வண்ண வரைகோல்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading