பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மு. மேத்தா | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | பிரியங்கா |
Vanakkuyile Kuyil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசையே… ஏஏஏஏ…
வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசையே… ஏஏஏஏ…
கொடி மலரே மலர் விடும் இதழே…
இதழ் தரும் மதுவே… ஏஏஏஏ…
ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசையே… ஏஏஏஏ…
ஆண் : மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே…
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன…
ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசையே… ஏஏஏஏ…
—BGM—
ஆண் : உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே…
ஓயாமலே என்னைப் பந்தாடுதே…
உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே…
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே…
ஆண் : படித்தால் இனித்திடும் புதினம்…
உன்னை நான் மறப்பது கடினம்…
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு…
வலைக்குள் தவித்திடும் தவிப்பு…
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்…
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்…
ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசையே… ஏஏஏஏ…
—BGM—
ஆண் : செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே…
கூந்தல் பனை தோரணம் ஆனதே…
பூ மாலையாய் தோன்றும் பூஞ்சோலையே…
எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே…
ஆண் : மண நாள் நினைவுகள் மலரும்…
மனதில் மலையென வளரும்…
வருவேன் தருவேன் கிளியே…
விழிக்குள் இருக்கும் விழியே…
இணைந்தால் இருவர் இணைந்தால்…
இன்ப வரவும் உறவும் சுகமே…
ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசையே… ஏஏஏஏ…
ஆண் : மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே…
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன…
ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசை… ஏஏஏஏ…
Notes : Vanakkuyile Kuyil Song Lyrics in Tamil. This Song from Priyanka (1994). Song Lyrics penned by Mu. Metha. வனக்குயிலே குயில் பாடல் வரிகள்.