பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | ராசா மகன் |
Vaikasi Vellikizhamai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வைகாசி வெள்ளிக்கிழமைதானே…
ஒரு ஜோரானா திருநாளு…
மைப் பூசிக் கண்ணை சிமிட்டும் மானே…
இங்கு நான் பாடும் இசை கேளு…
ஆண் : அட ராசா மகன்தான் புது ராகம் பாடிக்க…
இள ரோசா மலரும் அதை லேசா ரசிக்க…
சொல்ல ஏதேதோ சேதி இருக்க…
ஆண் : வைகாசி வெள்ளிக்கிழமைதானே…
ஒரு ஜோரானா திருநாளு…
மைப் பூசிக் கண்ணை சிமிட்டும் மானே…
இங்கு நான் பாடும் இசை கேளு…
—BGM—
ஆண் : ராத்திரி ரெண்டு ரெக்கை கட்டி…
மன வானிலே பறப்பா…
அவ தாசனின் இள நெஞ்சைக் கிள்ளி…
மழை கூந்தலில் முடிப்பா…
ஆண் : நடு சாமத்தில் புது சிந்து ஒன்னு…
வலையோசையில் படிப்பா…
அவ மாமனை நல்ல சொக்க வச்சி…
விழி தூண்டிலில் பிடிப்பா…
ஆண் : முன்னும் பின்னும் முத்துப் பல்லாக்கு…
அன்ன நடை போட…
மெட்டி சுட்டி நத்து புல்லாக்கு…
மின்ன மின்ன ஆட…
ஆண் : ஆத்தா அதை பார்க்கயில் ஆசை விடுமா…
பார்த்தா அனல் மாதிரி ஆள சுடுமா…
உயர் ஓவியம் ஒரு காவியம் அவதான்…
ஆண் : வைகாசி வெள்ளிக்கிழமைதானே…
ஒரு ஜோரானா திருநாளு…
மைப் பூசிக் கண்ணை சிமிட்டும் மானே…
இங்கு நான் பாடும் இசை கேளு…
—BGM—
ஆண் : ஊரிலே அவ கண்ணு பட்டு…
பல வாலிபம் துடிக்கும்…
மணித் தேரிலே வரும் அம்மன் என்று…
அவ மேனிதான் ஜொலிக்கும்…
ஆண் : நதி நீரிலே உள்ள கெண்டை ரெண்டு…
அவ பார்வையில் குதிக்கும்…
தமிழ் சீரிலே உள்ள சொல்லு எல்லாம்…
அவ வார்த்தையில் பிறக்கும்…
ஆண் : கண்ணம் என்னும் கின்னம் கொண்டாடும்…
கொல்லி மலைத் தேனு…
கொஞ்சி கொஞ்சி நெஞ்சம் பந்தாடும்…
வஞ்சி இளம் மானு…
ஆண் : பாவை அவ ஞாபகம் ராவில் வருது…
ஏக்கம் தலைக்கேறவும் தூக்கம் கெடுது…
அவ பாட்டை தினம் பாடுது மனம்தான்…
ஆண் : வைகாசி வெள்ளிக்கிழமைதானே…
ஒரு ஜோரானா திருநாளு…
மைப் பூசிக் கண்ணை சிமிட்டும் மானே…
இங்கு நான் பாடும் இசை கேளு…
ஆண் : அட ராசா மகன்தான் புது ராகம் பாடிக்க…
இள ரோசா மலரும் அதை லேசா ரசிக்க…
சொல்ல ஏதேதோ சேதி இருக்க…
ஆண் : வைகாசி வெள்ளிக்கிழமைதானே…
ஒரு ஜோரானா திருநாளு…
மைப் பூசிக் கண்ணை சிமிட்டும் மானே…
இங்கு நான் பாடும் இசை கேளு…
Notes : Vaikasi Vellikizhamai Song Lyrics in Tamil. This Song from Rasa Magan (1994). Song Lyrics penned by Vaali. வைகாசி வெள்ளிக்கிழமை பாடல் வரிகள்.