பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | ராசா மகன் |
Pombala Velaya Seiya Vandha Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பொம்பளை வேலைய செய்ய வந்த…
இந்த ராசாமகன பாரு…
அட புள்ளிகள வச்சி கோலம் போட வந்த…
மச்சான் கதைய கேளு…
குழு : பொம்பளை வேலைய செய்ய வந்த…
இந்த ராசாமகன பாரு…
அட புள்ளிகள வச்சி கோலம் போட வந்த…
மச்சான் கதைய கேளு…
பெண் : தாலியும் கழுத்தில் ஏறவில்லை…
இவர் சம்சாரமாகத்தான் ஆகவில்லை…
குழு : தாலியும் கழுத்தில் ஏறவில்லை…
இவர் சம்சாரமாகத்தான் ஆகவில்லை…
பெண் : ஆயிரந்தான் வேலை செஞ்ச போதிலும்…
அட எங்களப் போல புள்ளைய பெத்து…
போட முடியுமா…
தினம் குனிஞ்சி நிமிந்து வளைஞ்சி நெளிஞ்சி…
உழைக்க முடியுமா…
குழு : பொம்பளை வேலைய செய்ய வந்த…
இந்த ராசாமகன பாரு…
அட புள்ளிகள வச்சி கோலம் போட வந்த…
மச்சான் கதைய கேளு…
—BGM—
பெண் : மக்குபய மாப்பிள்ளைக்கு கண்ணாலந்தான் ஆனா…
இவ மக்கியாநாளே சேலையத்தான் துவைச்சிடுவான் தானா…
பொஞ்சாதிக்கு பாய்விரிச்சி கால் அமுக்கும் ஆளு…
அவ முந்தானையில் மாமனத்தான் முடிஞ்சிக்குவா பாரு…
பெண் : கூவுர சேவலுந்தான் கோழியா ஆனாலும்…
பெட்டைப்போல் முட்டை வைக்க ஆகுமா என்னாலும்…
குழு : ஏண்டியம்மா உனக்கு வந்து வாச்சிருக்கு கிறுக்கு…
எத்தனை நாள் ஆச்சி இந்த ஆம்பிளைதான் சமைஞ்சு…
பெண் : அடி ஆயிரந்தான் ஆனாலும் எங்களப்போல்…
ஒரு பின்னலப் போட்டு பூவ வாங்கி சூட முடியுமா…
தாய்ப்பாலு கேட்டு புள்ளையழுதா…
கொடுக்க முடியுமா… ஹாஹாஹா…
ஆண் : பொம்பள வேலைய செய்ய வந்த…
இந்த ராசா மகன பாரு…
அடி புள்ளிய வச்சித்தான் கோலம் போட வந்தா…
குத்தம் என்ன கூறு…
—BGM—
ஆண் : பிள்ளை குட்டி பெத்தெடுத்து போடுறது நீங்க…
அத பெத்தெடுக்க காரணமே மொத்ததுல நாங்க…
பொட்டக்கோழி தானாகத்தான் போடாதம்மா முட்டை…
அது முட்டை போட ஆசவைக்கும் கொண்டச்சேவல் கிட்ட…
ஆண் : ஆம்புள இல்லையின்னா பொம்பள எல்லாரும்…
கன்னியா நின்னுடனும் காலங்கள் பூராவும்…
ஆண் : அடி அல்லி என்று ஒருத்தி…
அவ ஆம்பளய வருத்தி…
ஹ… ஆட்டி வச்சா முதலில்…
பின்பு அர்ச்சுணனின் மடியில்…
ஆண் : அடி ஆயிரந்தான் ஆனாலும் எங்களப்போல்…
ஒரு மீசைய உங்க முகத்துலதான் வளர்க்க முடியுமா…
அத கட்டபொம்மன போல நீங்க முறுக்க முடியுமா…
ஆண் : பொம்பள வேலைய செய்ய வந்த…
இந்த ராசா மகன பாரு…
அடி புள்ளிய வச்சித்தான் கோலம் போட வந்தா…
குத்தம் என்ன கூறு…
ஆண் : ஆம்பளது சமைச்சு பாத்ததில்ல…
நீங்க வீமனின் கதைய கேட்டதில்லே…
ஆண் : நாலயும் ஆம்பள அறிஞ்சவன்டி…
வேலையும் வெட்டியும் தெரிஞ்சவன்டி…
ஆம்பளய கேவளமா பேசுற…
அடி எங்களப் போல பொம்பள நீங்க ஆக முடியுமா…
ஒரு சட்டையில்லாம தெருவில் நீங்க போகமுடியுமா…
ஆண் : பொம்பளை வேலைய செய்ய வந்த…
இந்த ராசா மகன பாரு…
அடி புள்ளிய வச்சித்தான் கோலம் போட வந்தா…
குத்தம் என்ன கூறு…
—BGM—
Notes : Pombala Velaya Seiya Vandha Song Lyrics in Tamil. This Song from Rasa Magan (1994). Song Lyrics penned by Vaali. பொம்பளை வேலைய பாடல் வரிகள்.