வாம்மா துரையம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண், வி.எம்.சி. ஹனீபா & எமி ஜாக்சன்ஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Vaamma Duraiyamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

ஆண் : கட்டவண்டியில் போவோம்…
ட்ராமில் ஏரியும் போவோம்…
கூவம் படகிலும் போவோம் போலாமா…

ஆண் : மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா…
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா…
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா…

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

BGM

ஆண் : ஓர் பாவைக்கூத்துக்கள் பொம்மல்லாட்டங்கள்…
கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்…
இன்னும் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே…
பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்…

ஆண் : கோடி ஜாதிகள் இங்கே உள்ள போதிலும்…
அண்ணன் தம்பியாய் நாங்கள் வாழுவோம்…
வீட்டில் திண்ணைகள் வைத்துக் கட்டுவோம் எம்மா…
வழிப்போக்கன் வந்து தான் தங்கிச் செல்லுவான் சும்மா…
தாயும் தெய்வம்தான் இங்கே எம்மம்மா…

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

BGM

ஆண் : ஓர் கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும்…
செந்தமிழ் எங்கள் மொழியாகும்…
அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன…
வாழ்க்கையே எங்கள் நெறியாகும்…

ஆண் : இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்…
இங்கு மட்டுமே அன்பை காணலாம்…

ஆண் : வீர மன்னர்கள் வாழ்ந்த நாடு இது எம்மா…
இதை அடிமையாக்கித் தான் கொடுமை செய்வது ஞாயமா…
வலையில் மழையும்தான் விழுந்தது எம்மம்மா…

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

ஆண் : கட்டவண்டியில் போவோம்…
ட்ராமில் ஏரியும் போவோம்…
கூவம் படகிலும் போவோம் போலாமா…

ஆண் : மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா…
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா…
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா…


Notes : Vaamma Duraiyamma Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. வாம்மா துரையம்மா பாடல் வரிகள்.