பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | அம்மன் கோவில் கிழக்காலே |
Un Paarvaiyil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…
பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
—BGM—
பெண் : அசைத்து இசைத்தது வளைக்கரம்தான்…
ஆண் : இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்…
பெண் : சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்…
ஆண் : கழுத்தில் இருப்பது வலம்புரிதான்…
ஆண் : இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்…
பெண் : இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்…
ஆண் : மனதை மயிலிடம் இழந்தேனே…
பெண் : மயங்கி தினம் தினம் விழுந்தேனே…
ஆண் : மறந்து…
பெண் : இருந்து…
ஆண் : பறந்து தினம் மகிழ…
பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…
பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
—BGM—
பெண் : அணைத்து நனைந்தது தலையணைதான்…
அடுத்த அடியென்ன எடுப்பது நான்…
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்…
இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான்…
பெண் : நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்…
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்…
மறைத்த முகத்திரை திறப்பாயோ…
திறந்து அகசிறை இருப்பாயோ…
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய…
பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…
பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
Notes : Un Paarvaiyil Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. உன் பார்வையில் பாடல் வரிகள்.