பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | ஹரிஹரன் | சுந்தர் சி பாபு | நாடோடிகள் |
Ulagil Yentha Kathal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது…
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது…
காதல் தோற்றதாய் கதைகள் ஏது…
தோற்றால் தோற்றது காதல் ஆகாது…
எல்லாமே சந்தர்ப்பம்…
கற்பிக்கும் தப்பர்த்தம்…
ஆண் : உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது…
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது…
—BGM—
ஆண் : நினைவுகளாலே நிச்சியதார்த்தம் நடந்தது அவனோடு…
அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு…
ஆண் : ஒரு புறம் தலைவன் மறுபுறம் தகப்பன்…
இரு கொள்ளி எரும்பானாள்…
பாசத்துக்காக காதலை தொலைத்து…
ஆலையில் கரும்பானாள்…
ஆண் : யார் காரணம் யார் காரணம்…
யார் பாவம் யாரைச்சேரும் யார்தான் சொல்ல…
கண்ணீர் வார்த்தாள் கண்ணீர் ஆனேன்…
சுற்றம் செய்த குற்றம்தானே…
ஆண் : உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ் நிலை…
உணர்வை பார்ப்பதேது உறவின் சூழ்நிலை…
—BGM—
ஆண் : மனமென்னும் குளத்தில் விழி என்னும் கல்லை…
முதல் முதல் எரிந்தாளே…
அலைஅலையாக ஆசைகள் எழும்ப…
அவள் வசம் விழுந்தானே…
ஆண் : நதி வழிப்போனால் கரை வரக்கூடும்…
விதி வழி போனானே…
விதை ஒன்று போட வேர் ஒன்று முளைத்த…
கதை என்று ஆனானே…
ஆண் : என் சொல்வது என் சொல்வது…
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்…
கற்பை போலே நட்பை பார்த்தான்…
காதல் தோற்கும் என்றா பார்த்தான்…
ஆண் : உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது…
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது…
காதல் தோற்றதாய் கதைகள் ஏது…
தோற்றால் தோற்றது காதல் ஆகாது…
எல்லாமே சந்தர்ப்பம்…
கற்பிக்கும் தப்பர்த்தம்…
ஆண் : உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது…
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது…
Notes : Ulagil Yentha Kathal Song Lyrics in Tamil. This Song from Naadodigal (2009). Song Lyrics penned by Vaali. உலகில் எந்த காதல் பாடல் வரிகள்.