thuli-thuli-song-lyrics

துளி துளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & தன்வியுவன் ஷங்கர் ராஜாபையா

Thuli Thuli Song Lyrics in Tamil


BGM

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…
பார்த்தால் பார்க்க தோன்றும்…
பேரை கேட்க தோன்றும்…
பூப்போல் சிரிக்கும்போது…
காற்றாய் பறந்திட தோன்றும்…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…

BGM

ஆண் : தேவதை அவள் ஒரு தேவதை…
அழகிய பூ முகம் காணவே ஆயுள்தான் போதுமோ…
காற்றிலே அவளது வாசனை…
அவளிடம் யோசனை கேட்டுதான்…
பூக்களும் பூக்குமோ…

ஆண் : நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது…
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்…
பார்வை ஆளை தூக்கும்…

ஆண் : கன்னம் பார்த்தால்…
முத்தங்களால் தீண்ட தோன்றும்…
பாதம் ரெண்டு பார்க்கும் போது…
கொலுசாய் மாற தோன்றும்…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…

BGM

ஆண் : சாலையில் அழகிய மாலையில்…
அவளுடன் போகவே ஏங்குவேன்…
தோள்களில் சாயுவேன்…
பூமியில் விழுகிற வேளையில்…
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்…
நெஞ்சிலே தாங்குவேன்

ஆண் : காணும்போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள்…
காயம் இன்றி வெட்டி போட்டாள்…
உயிரை ஏதோ செய்தாள்…

ஆண் : மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்…
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்…
கனவில் கூச்சல் போட்டாள்…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…

BGM

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…
துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…


Notes : Thuli Thuli Song Lyrics in Tamil. This Song from Paiya (2010). Song Lyrics penned by Na. Muthukumar. துளி துளி பாடல் வரிகள்.