| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| கே. சோமு | கே. வீரமணி | கே. வீரமணி & சோமு | ஐயப்பன் பாடல்கள் |
Thulasimani Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்…
—BGM—
ஆண் : துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்…
தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம்…
ஆண் : துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்…
—BGM—
ஆண் : பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலே…
பரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று…
ஆண் : துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்…
—BGM—
ஆண் : சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து…
சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து…
சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து…
சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து…
ஆண் : கணாதிபன் அந்த விநாயகன் தம்பி…
குணகரனை அனுதினம் நினைந்து…
கணாதிபன் அந்த விநாயகன் தம்பி…
குணகரனை அனுதினம் நினைந்து…
ஆண் : இணைபடியே நம்பி வந்து…
ஐயன் இதயத்திலே நாம் கலந்து…
பணிந்து மகிழ்ந்து கனிந்து விரதமிருந்து இருமுடி சுமந்து…
குருவடிவானவன் கருணையை அறிந்து…
திருவருள் நிறைந்திடும் சன்னதி வந்திடவே…
ஆண் : துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்…
—BGM—
ஆண் : பவள மணித் திருமார்பினிலே…
பந்தளராஜனின் ஆபரணம்…
அவனியெல்லாம் போற்றிடவே…
அந்த மணிகண்ட குமரனின் அலங்காரம்…
ஆண் : பவள மணித் திருமார்பினிலே…
பந்தளராஜனின் ஆபரணம்…
அவனியெல்லாம் போற்றிடவே…
அந்த மணிகண்ட குமரனின் அலங்காரம்…
ஆண் : பலவினைகள் நீங்கிடவே பகவான் நாமம் பாடிடுவோம்…
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம்…
சுவாமியே சரணம் ஐயப்பா…
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம்…
சுவாமியே சரணம் ஐயப்பா…
ஆண் : பலவினைகள் நீங்கிடவே…
பகவான் நாமம் பாடிடுவோம்…
நம் கவலையெல்லாம் மறந்திடவே…
கருணை மழையில் கூடிடுவோம்…
ஆண் : துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்…
தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம்…
ஆண் : துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்…
Notes : Thulasimani Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by K. Somu. துளசி மணி மாலை பாடல் வரிகள்.

