பள்ளிக் கட்டு சபரிமலைக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
சிவமணிகே. வீரமணிசோமு & கஜாஐயப்பன் பாடல்கள்

Pallikattu Sabarimalaikku Song Lyrics in Tamil


ஆண் : இருமுடி தாங்கி ஒரு மனதாகி…
குருவெனவே வந்தோம்…
இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும்…
திருவடியைக் காண வந்தோம்…

BGM

ஆண் : பள்ளிக் கட்டு சபரிமலைக்கு…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…
ஸ்வாமியே ஐயப்போ…
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்…

ஆண் : பள்ளிக் கட்டு சபரிமலைக்கு…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…
ஸ்வாமியே ஐயப்போ…
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்…

BGM

ஆண் : பள்ளிக் கட்டு சபரிமலைக்கு…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…

BGM

ஆண் : பள்ளிக் கட்டு சபரிமலைக்கு…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…

ஆண் : நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே…
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே…
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு…
ஐயனை நாடி சென்றிடுவார்…
சபரி மலைக்கு சென்றிடுவார்…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…

குழு : ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…

BGM

ஆண் : கார்த்திகை மாதம் மாலை அணிந்து…
நேர்த்தியாகவே விரதம் இருந்து…

BGM

ஆண் : பார்த்த சாரதியின் மைந்தனே…
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து…

குழு : பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து…

ஆண் : இருமுடி எடுத்து எரிமேலி வந்து…
ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி…
அருமை நண்பராம் வாவரை தொழுது…
ஐயனின் அருள் மலை ஏறிடுவார்…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…

குழு : ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…

BGM

ஆண் : அழுதை ஏற்றம் ஏறும் போது…
ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்…
வழி காட்டிடவே வந்திடுவார்…
ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்…

BGM

ஆண் : கரிமலை ஏற்றம் கடினம் கடினம்…
கருணை கடலும் துணை வருவார்…
கரிமலை இறக்கம் வந்த உடனே…
திருநதி பம்பையை கண்டிடுவார்…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…

குழு : ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…

BGM

ஆண் : கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம்…
பம்பையில் நீராடி…
சங்கரன் மகனை கும்பிடுவார்…
சஞ்சலமின்றி ஏறிடுவார்…

BGM

ஆண் : நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்…
காலமெல்லாம் நமக்கே அருட் காவலனாய் இருப்பார்…

ஆண் : தேக பலம் தா பாத பலம் தா…
தேக பலம் தா பாத பலம் தா…

ஆண் : தேக பலம் தா என்றால் அவரும்…
தேகத்தை தந்திடுவார்…
பாத பலம் தா என்றால் அவரும்…
பாதத்தை தந்திடுவார்…
நல்ல பாதையைக் காட்டிடுவார்…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…

குழு : ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…

BGM

ஆண் : சபரி பீடமே வந்திடுவார்…
சபரி அன்னையை பணிந்திடுவார்…
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும்…
சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்…
சபரி மலைதனில் நெருங்கிடுவார்…

ஆண் : பதினெட்டு படி மீது ஏறிடுவார்…
கதியென்று அவனை சரணடைவார்…
மதி முகம் கண்டே மயங்கிடுவார்…
ஐயனைத் துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்…

ஆண் : பள்ளிக் கட்டு சபரிமலைக்கு…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…
ஸ்வாமியே ஐயப்போ…
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்…

ஆண் : பள்ளிக் கட்டு சபரிமலைக்கு…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…

ஆண் : ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…

{ ஆண் : சரணம் சரணம் ஐயப்பா…
குழு : ஸ்வாமி சரணம் ஐயப்பா…
ஆண் : சரணம் சரணம் ஐயப்பா…
குழு : ஸ்வாமி சரணம் ஐயப்பா… } * (3)


Notes : Pallikattu Sabarimalaikku Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Sivamani. பள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top