பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
சிவமணி | கே. வீரமணி | சோமு & கஜா | ஐயப்பன் பாடல்கள் |
Pallikattu Sabarimalaikku Song Lyrics in Tamil
ஆண் : இருமுடி தாங்கி ஒரு மனதாகி…
குருவெனவே வந்தோம்…
இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும்…
திருவடியைக் காண வந்தோம்…
—BGM—
ஆண் : பள்ளிக் கட்டு சபரிமலைக்கு…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…
ஸ்வாமியே ஐயப்போ…
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்…
ஆண் : பள்ளிக் கட்டு சபரிமலைக்கு…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…
ஸ்வாமியே ஐயப்போ…
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்…
—BGM—
ஆண் : பள்ளிக் கட்டு சபரிமலைக்கு…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…
—BGM—
ஆண் : பள்ளிக் கட்டு சபரிமலைக்கு…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…
ஆண் : நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே…
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே…
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு…
ஐயனை நாடி சென்றிடுவார்…
சபரி மலைக்கு சென்றிடுவார்…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…
குழு : ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…
—BGM—
ஆண் : கார்த்திகை மாதம் மாலை அணிந்து…
நேர்த்தியாகவே விரதம் இருந்து…
—BGM—
ஆண் : பார்த்த சாரதியின் மைந்தனே…
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து…
குழு : பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து…
ஆண் : இருமுடி எடுத்து எரிமேலி வந்து…
ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி…
அருமை நண்பராம் வாவரை தொழுது…
ஐயனின் அருள் மலை ஏறிடுவார்…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…
குழு : ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…
—BGM—
ஆண் : அழுதை ஏற்றம் ஏறும் போது…
ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்…
வழி காட்டிடவே வந்திடுவார்…
ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்…
—BGM—
ஆண் : கரிமலை ஏற்றம் கடினம் கடினம்…
கருணை கடலும் துணை வருவார்…
கரிமலை இறக்கம் வந்த உடனே…
திருநதி பம்பையை கண்டிடுவார்…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…
குழு : ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…
—BGM—
ஆண் : கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம்…
பம்பையில் நீராடி…
சங்கரன் மகனை கும்பிடுவார்…
சஞ்சலமின்றி ஏறிடுவார்…
—BGM—
ஆண் : நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்…
காலமெல்லாம் நமக்கே அருட் காவலனாய் இருப்பார்…
ஆண் : தேக பலம் தா பாத பலம் தா…
தேக பலம் தா பாத பலம் தா…
ஆண் : தேக பலம் தா என்றால் அவரும்…
தேகத்தை தந்திடுவார்…
பாத பலம் தா என்றால் அவரும்…
பாதத்தை தந்திடுவார்…
நல்ல பாதையைக் காட்டிடுவார்…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…
குழு : ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…
—BGM—
ஆண் : சபரி பீடமே வந்திடுவார்…
சபரி அன்னையை பணிந்திடுவார்…
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும்…
சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்…
சபரி மலைதனில் நெருங்கிடுவார்…
ஆண் : பதினெட்டு படி மீது ஏறிடுவார்…
கதியென்று அவனை சரணடைவார்…
மதி முகம் கண்டே மயங்கிடுவார்…
ஐயனைத் துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்…
ஆண் : பள்ளிக் கட்டு சபரிமலைக்கு…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…
ஸ்வாமியே ஐயப்போ…
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்…
ஆண் : பள்ளிக் கட்டு சபரிமலைக்கு…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…
ஆண் : ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…
ஸ்வாமியே ஐயப்போ…
ஐயப்போ ஸ்வாமியே…
{ ஆண் : சரணம் சரணம் ஐயப்பா…
குழு : ஸ்வாமி சரணம் ஐயப்பா…
ஆண் : சரணம் சரணம் ஐயப்பா…
குழு : ஸ்வாமி சரணம் ஐயப்பா… } * (3)
Notes : Pallikattu Sabarimalaikku Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Sivamani. பள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்.