பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பொன்னடியான் | மனோ & உமா ரமணன் | இளையராஜா | மணிக்குயில் |
Thaneeriley Mugam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…
பெண் : இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா…
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா…
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா…
ஆண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…
—BGM—
ஆண் : உன்னிடத்தில் இத்தனை நாள்…
உண்மை ஒன்றை மறைத்ததுண்டு…
சின்னஞ்சிறு வயது முதல்…
எனக்கொரு மனைவி உண்டு…
ஆண் : கோபம் கொள்ள வேண்டாம் அம்மா… ஹோய்…
தாங்கிக் கொள்ள வேண்டும் அம்மா…
பெண் : நல்லவன் என்று உன்னையே நினைத்தேனே…
உண்மை அறிந்து துடித்தேன் நான்தானே…
போட்டதென்ன வேஷம் இனி போதும் போதும் மோசம்…
ஆண் : நான் சொன்ன சம்சாரம் எந்தன் சங்கீதம்…
இதைக் கண்டு கொள்ள முடியாமல் ஆர்பாட்டமா…
பெண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…
ஆண் : இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா…
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா…
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா…
ஆண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…
—BGM—
பெண் : நெஞ்சை அள்ளும் பாடலிலே…
என்னை அள்ளிக் கொடுத்துவிட்டேன்…
நல்ல இசைத் தேடலிலே…
வேறெதையும் மறந்துவிட்டேன்…
பெண் : என்னுடைய சங்கீதம் நீ… ஹோ ஹோ…
உன்னுடைய சாரீரம் நான்…
ஆண் : ஒன்றை ஒன்றுதான் இனி மேல் பிரியாது…
அள்ள அள்ளத்தான் அமுதம் குறையாது…
தெள்ளு தமிழ் பள்ளு உன் கண்ணில் உள்ள கள்ளு…
பெண் : எந்நாளும் உன் நாதம் என்னை நீங்காது…
இனி காலம் தோறும் ஓயாது ஆலாபனம்…
ஆண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…
பெண் : இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா…
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா…
ஆண் : இனி உன்னைவிட்டு நான் வாழ ஆகாதம்மா…
பெண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
ஆண் : நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…
Notes : Thaneeriley Mugam Song Lyrics in Tamil. This Song from Manikuyil (1993). Song Lyrics penned by Ponnadiyan. தண்ணீரிலே முகம் பாடல் வரிகள்.