தம் தம் தாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஆனந்த்அரோல் கோரெல்லிபசங்க 2

Tham Tham Song Lyrics in Tamil


ஆண் : தம் தம் தாரா ரம் பம் பம் பம்…
தம் தம் தாரா பம் பம் பா…
தாரே ராரே ராரே ரா…

ஆண் : டம் டம் ஓசை டம் டம் டம் டம்…
நெஞ்சம் பாடும் சங்கீதம்…
காதில் கேட்கின்றதா…

ஆண் : தொல்லைகள் இன்றி…
ஒரு பிள்ளை இல்லையே…
பொம்மை போல் வாழ்ந்தால்…
அது பிள்ளை இல்லையே…

ஆண் : கவலைகள் என்ன…
நாம் காட்டின் பிள்ளையே…
மரம் தோறும் தாவி…
நாம் வாழ்ந்தோம் உண்மையே…

ஆண் : தம் தம் தாரா ரம் பம் பம் பம்…
தம் தம் தாரா பம் பம் பா…
தாரே ராரே ராரே ரா…

ஆண் : டம் டம் ஓசை டம் டம் டம் டம்…
நெஞ்சம் பாடும் சங்கீதம்…
காதில் கேட்கின்றதா…

BGM

ஆண் : தாய் வயிற்றில் இருக்கையிலே…
கை காலை அசைத்திருந்தோம்…
ஏன் இங்கு பிறந்தவுடன்…
பொய் அமைதி காட்டுகிறோம்…

ஆண் : போகாத கால்கள் ஊர் சேருமா…
உன் எண்ணம் போல் நீ போ…

ஆண் : நீ பல வானம்தான் கேட்டாயடா…
உன் சிறகாக நான் வருவேனடா இங்கே…

ஆண் : தம் தம் தாரா ரம் பம் பம் பம்…
தம் தம் தாரா பம் பம் பா…
தாரே ராரே ராரே ரா…

ஆண் : டம் டம் ஓசை டம் டம் டம் டம்…
நெஞ்சம் பாடும் சங்கீதம்…
காதில் கேட்கின்றதா…

BGM

ஆண் : கண்ணாடி தொட்டியிலே…
வாழ்கின்ற மீன்களுக்கு…
கடல் நீந்தும் அனுபவத்தை…
நாம் கொடுக்க மறுக்கின்றோம்…

ஆண் : காத்தாடி போல் நீ ஆடலாம்…
நூல் ஒன்றும் இல்லை நீ போ…

ஆண் : நீ அதிகாலை பூ போல்தானடா…
உன்னை பறிக்காமல் நான் காப்பேனடா இங்கே…

ஆண் : தம் தம் தாரா ரம் பம் பம் பம்…
தம் தம் தாரா பம் பம் பா…
தாரே ராரே ராரே ரா…

ஆண் : டம் டம் ஓசை டம் டம் டம் டம்…
நெஞ்சம் பாடும் சங்கீதம்…
காதில் கேட்கின்றதா…

ஆண் : தொல்லைகள் இன்றி…
ஒரு பிள்ளை இல்லையே…
பொம்மை போல் வாழ்ந்தால்…
அது பிள்ளை இல்லையே…

ஆண் : கவலைகள் என்ன…
நாம் காட்டின் பிள்ளையே…
மரம் தோறும் தாவி…
நாம் வாழ்ந்தோம் உண்மையே…

BGM


Notes : Tham Tham Song Lyrics in Tamil. This Song from Pasanga 2 (2015). Song Lyrics penned by Na. Muthukumar. தம் தம் தாரா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top