Tag Archives: ஸ்ரீஷா விஜயசேகர்

kaathirundhen-song-lyrics-maara

காத்திருந்தேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனந்து & ஸ்ரீஷா விஜயசேகர்ஜிப்ரான்மாறா

Kaathirundhen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…

பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

ஆண் : நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்…
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை…

பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும்…
நான் கூட அதே நிலை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

—BGM—

பெண் : முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய்…
பல கதவு மோதும் காகிதம் ஆனேனே…

ஆண் : அறிமுகங்கள் இல்லா பல கதவுகளிலும்…
ஒரு முகத்தை தேடும் கார்முகில் நானேனே…

பெண் : பேசாத கதை நூறு…
பேசும் நிலை வரும் போது…
வார்த்தை என எதுவும் வராது…
வராது வராது மௌனம் ஆனேனே…

ஆண் : காலம் உறைந்தே போகும்…
காற்று அழுதே தீரும்…

பெண் : இந்த நொடி இறந்தாலும் சம்மதம்…

ஆண் : கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும்…

—BGM—

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…
நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்…
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை…

பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும்…
நான் கூட அதே நிலை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

—BGM—


Notes : Kaathirundhen Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. காத்திருந்தேன் பாடல் வரிகள்.