Tag Archives: ரானினா ரெட்டி

malai-mangum-neram-song-lyrics

மாலை மங்கும் நேரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைரானினா ரெட்டிபிரகாஷ் நிக்கிரௌத்திரம்

Malai Mangum Neram Song Lyrics in Tamil


BGM

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

பெண் : பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்…
தீயாய் மாறும் தேகம் தேகம்…
உன் கைகள் என்னை தொட்டு கோலம் போடும்…
வாழ்வின் எல்லை தேடும் தேடும்…

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

BGM

பெண் : ஒரு வீட்டில் நாம் இருந்து…
ஓர் இலையில் நம் விருந்து…
இரு தூக்கம் ஒரு கனவில்…
மூழ்கி வாழ்க்கை தொடங்கும்…

பெண் : நான் சமையல் செய்திடுவேன்…
நீ வந்து அணைத்திடுவாய்…
என் பசியும் உன் பசியும்…
சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்…

பெண் : நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு…
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்…
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீதான்…
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்…

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

BGM

பெண் : பால் சிந்தும் பௌர்ணமியில்…
நாம் நனைவோம் பனி இரவில்…
நம் மூச்சுக் காய்ச்சலில்…
இந்த பனியும் நடுங்கும்…

பெண் : வீடெங்கும் உன் பொருட்கள்…
அசைந்தாடும் உன் உடைகள்…
தனியாக நான் இல்லை…
என்றே சொல்லி சினுங்கும்…

பெண் : தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே…
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு…
உன் வாசம் என்னில் பட்டும் வாடி போனேன்…
வாசல் தூணாய் நானும் ஆனேன்…

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

BGM


Notes : Malai Mangum Neram Song Lyrics in Tamil. This Song from Rowthiram (2011). Song Lyrics penned by Thamarai. மாலை மங்கும் நேரம் பாடல் வரிகள்.


ரடடபடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவு & ரானினா ரெட்டிசி.சத்யாஅரண்மனை 3

Ratatapata Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரடடபடா…
லைட்ஸ் ஒன் மேன்…
ரடடபடா…
லைட்ஸ் ஒன் பேபி…
ரடடபடா ரடடபடா…
ரா ரா ரெடி கோ…

ஆண் : அரண்மனைக்குள்ள யாருடா…
அது அரண்டவன் கண்ணுக்குதான் பேயிடா…
கதவடைப்பது யாருடா…
உன்ன பயப்பட வைக்கும் வந்து பாருடா…

ஆண் : பல்ல காட்டும் உன்ன கேக்கும்…
வந்து கண்ண கண்ண உருட்டிக்கும்…
அது கேப்புல தாக்கும் கொல்ல பாக்கும்…
அது நினைச்சத நடத்திட எடம் கேக்கும்…

ஆண் : ரடடபடா ஹேய் ரடடபடா…
ரடடபடா ஹேய் ரடடபடா…
ரா ரா ரா ரெடி பார்…

BGM

ஆண் : ரடடபடா உன்ன கடிக்கும்…
ரடடபடா உன்ன இழுக்கும்…
ரடடபடா கண்ண பறிக்கும்…
ரடடபடா…

BGM

ஆண் : நடக்குற இது ஒரு படபட நொடி…
பயத்துல ஒலருது அரண்மனை கிளி…
இன்னும் கொஞ்ச நேரத்துல இருக்குது இடி…
அடிக்கடி எழும்புது சலசல ஒலி…

ஆண் : சின்னஞ்சிறு வயசுல சொல்லித்தர பயம்…
கல்லறைக்கு போகும் போது கூட கூட வரும்…
மனசுல நெனைப்பது நெனப்பில்ல நிஜம்…
நிஜத்துக்கு பயந்தா உனக்கில்ல எடம்…

ஆண் : இங்க வந்து சிரிக்குது…
உடம்பெல்லாம் நடுங்குது…
கைய கட்டி இழுக்குது…
அரண்மனை அழைக்குது…
அந்தபக்கம் சிரிக்குது…
இந்த பக்கம் மொறைக்குது…
கதவு இங்கு திறக்குது…
அரண்மனை…

BGM

ஆண் : அரண்மனை… அரண்மனை…
அரண்மனை… அரண்மனை…
அரண்மனை… அரண்மனை…
அரண்மனை… அரண்மனை…

ஆண் : அரண்மனைக்குள்ள யாருடா…
அது அரண்டவன் கண்ணுக்குதான் பேயிடா…
கதவடைப்பது யாருடா…
உன்ன பயப்பட வைக்கும் வந்து பாருடா…

ஆண் : சேக் சேக் காரா சேக் இட் சேக் இட்…
அது பொல்லாங்காட்டி ப்ரேக் இட் ப்ரேக் இட்…
ஆட்டம் போடுவ ராக் இட் ராக் இட்…
இந்த அரண்மனை கதவுல பி வேர் அ பார்…

ஆண் : அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் ஒளிஞ்சு தாக்கும் நெஜம்…
நெஞ்சுக்குள்ள பட பட பயத்த காட்டும்… ஓஹொ…
முன்ன பின்ன தெரியாது முடிஞ்சு போச்சு கதை…
நல்ல கதைலாம் இங்க பொரட்டி போட்டு வரும்…

ஆண் : கண்ணாடி முன்னாடி கைகாட்டுது…
இல்லாத பொல்லாத பேய் காட்டுது…
சொல்லாம கொல்லாம வாலாட்டுது…
உன்னோட என்னோட நிறம் தாக்குது…

ஆண் : உள்ளுக்குள்ள எரியுது…
முன்ன பின்ன இழுக்குது…
கொல்ல கொல்ல துடிக்குது…
பல்ல பல்ல இழிக்குது…
அள்ளிவிட்டு தொலைக்குது…
உள்ள இங்க இனிக்குது…
அரண்மனை அழைக்குது…

ஆண் : ரடடபடா…
லைட்ஸ் ஒன் மேன்…
ரடடபடா…
லைட்ஸ் ஒன் பேபி…


Notes : Ratatapata Song Lyrics in Tamil. This Song from Aranmanai 3 (2021). Song Lyrics penned by Arivu. ரடடபடா பாடல் வரிகள்.