ராசாவே உன்னை நம்பி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிஇளையராஜாமுதல் மரியாதை

Raasave Unna Nambi Song Lyrics in Tamil


BGM

பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க…
அது உசுர வந்து உருக்குதுங்க…

பெண் : வந்து சொல்லாத உறவை…
இவ நெஞ்சோடு வளர்த்தா…
அது தப்பான கருத்தா…
தண்ணீரில் எழுத்தா…

பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…

BGM

பெண் : பழசை மறக்கலையே…
பாவி மக நெஞ்சு துடிக்குது…
உன்னையும் என்னையும் வச்சு…
ஊரு சனம் கும்மி அடிக்குது…

பெண் : அடடா எனக்காக அருமை கொறஞ்சீக…
தரும மகராசா தலைய கவுந்தீக…

பெண் : களங்கம் வந்தால் என்ன பாரு…
அதுக்கும் நிலான்னு தான் பேரு…
அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…

பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…

BGM

பெண் : காதுல நரைச்ச முடி…
கன்னத்துல குத்துது குத்துது…
சுழியில படகு போல…
என் மனசு சுத்துது சுத்துது…

பெண் : பருவம் தெரியாம…
மழையும் பொழிஞ்சாச்சு…
வெவரம் தெரியாம…
மனசும் நனைஞ்சாச்சு…

பெண் : உனக்கே வச்சிருக்கேன் மூச்சு…
எதுக்கு இந்த கதி ஆச்சு…
அட கண்ணு காது மூக்கு வச்சு…
ஊருக்குள்ளே பேச்சு…

பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க…
அது உசுர வந்து உருக்குதுங்க…

பெண் : வந்து சொல்லாத உறவை…
இவ நெஞ்சோடு வளர்த்தா…
அது தப்பான கருத்தா…
தண்ணீரில் எழுத்தா…

பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…


Notes : Raasave Unna Nambi Song Lyrics in Tamil. This Song from Muthal Mariyathai (1985). Song Lyrics penned by Vairamuthu. ராசாவே உன்னை நம்பி பாடல் வரிகள்.


Scroll to Top