பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். ஜானகி | இளையராஜா | முதல் மரியாதை |
Raasave Unna Nambi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க…
அது உசுர வந்து உருக்குதுங்க…
பெண் : வந்து சொல்லாத உறவை…
இவ நெஞ்சோடு வளர்த்தா…
அது தப்பான கருத்தா…
தண்ணீரில் எழுத்தா…
பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…
—BGM—
பெண் : பழசை மறக்கலையே…
பாவி மக நெஞ்சு துடிக்குது…
உன்னையும் என்னையும் வச்சு…
ஊரு சனம் கும்மி அடிக்குது…
பெண் : அடடா எனக்காக அருமை கொறஞ்சீக…
தரும மகராசா தலைய கவுந்தீக…
பெண் : களங்கம் வந்தால் என்ன பாரு…
அதுக்கும் நிலான்னு தான் பேரு…
அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…
பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…
—BGM—
பெண் : காதுல நரைச்ச முடி…
கன்னத்துல குத்துது குத்துது…
சுழியில படகு போல…
என் மனசு சுத்துது சுத்துது…
பெண் : பருவம் தெரியாம…
மழையும் பொழிஞ்சாச்சு…
வெவரம் தெரியாம…
மனசும் நனைஞ்சாச்சு…
பெண் : உனக்கே வச்சிருக்கேன் மூச்சு…
எதுக்கு இந்த கதி ஆச்சு…
அட கண்ணு காது மூக்கு வச்சு…
ஊருக்குள்ளே பேச்சு…
பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க…
அது உசுர வந்து உருக்குதுங்க…
பெண் : வந்து சொல்லாத உறவை…
இவ நெஞ்சோடு வளர்த்தா…
அது தப்பான கருத்தா…
தண்ணீரில் எழுத்தா…
பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…
Notes : Raasave Unna Nambi Song Lyrics in Tamil. This Song from Muthal Mariyathai (1985). Song Lyrics penned by Vairamuthu. ராசாவே உன்னை நம்பி பாடல் வரிகள்.