ராசாவே உன்னை நம்பி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிஇளையராஜாமுதல் மரியாதை

Raasave Unna Nambi Song Lyrics in Tamil


BGM

பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க…
அது உசுர வந்து உருக்குதுங்க…

பெண் : வந்து சொல்லாத உறவை…
இவ நெஞ்சோடு வளர்த்தா…
அது தப்பான கருத்தா…
தண்ணீரில் எழுத்தா…

பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…

BGM

பெண் : பழசை மறக்கலையே…
பாவி மக நெஞ்சு துடிக்குது…
உன்னையும் என்னையும் வச்சு…
ஊரு சனம் கும்மி அடிக்குது…

பெண் : அடடா எனக்காக அருமை கொறஞ்சீக…
தரும மகராசா தலைய கவுந்தீக…

பெண் : களங்கம் வந்தால் என்ன பாரு…
அதுக்கும் நிலான்னு தான் பேரு…
அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…

பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…

BGM

பெண் : காதுல நரைச்ச முடி…
கன்னத்துல குத்துது குத்துது…
சுழியில படகு போல…
என் மனசு சுத்துது சுத்துது…

பெண் : பருவம் தெரியாம…
மழையும் பொழிஞ்சாச்சு…
வெவரம் தெரியாம…
மனசும் நனைஞ்சாச்சு…

பெண் : உனக்கே வச்சிருக்கேன் மூச்சு…
எதுக்கு இந்த கதி ஆச்சு…
அட கண்ணு காது மூக்கு வச்சு…
ஊருக்குள்ளே பேச்சு…

பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க…
அது உசுர வந்து உருக்குதுங்க…

பெண் : வந்து சொல்லாத உறவை…
இவ நெஞ்சோடு வளர்த்தா…
அது தப்பான கருத்தா…
தண்ணீரில் எழுத்தா…

பெண் : ராசாவே உன்னை நம்பி…
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…


Notes : Raasave Unna Nambi Song Lyrics in Tamil. This Song from Muthal Mariyathai (1985). Song Lyrics penned by Vairamuthu. ராசாவே உன்னை நம்பி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top