பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | தேவா | ப்ரியமுடன் |
Pooja Vaa Pooja Vaa Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூஜா வா பூஜா வா…
பூஜைக்கு வந்த நிலவே வா…
ஆண் : பூஜா வா பூஜா வா…
பூஜைக்கு வந்த நிலவே வா…
இந்திர மண்டலம் தேடும் அழகே வா…
—BGM—
ஆண் : ரோஜா வா ரோஜா வா…
ஏதேன் தோட்டத்து ரோஜா வா…
உறங்கும் போதும் வாழும் நினைவே வா…
ஆண் : தோளில் நீ தூங்கு…
உன் தூக்கம் நானாவேன்…
உன் மேல் பூ விழுந்தாலும்…
நான் உள்ளம் புண்ணாவேன்…
ஆண் : உன்னோடு நான் வாழ்ந்தால்…
மரணத்தின் பயமில்லையே…
—BGM—
ஆண் : பூவைப் பறிக்கும் போது…
அதில் ஈரம் உன் காதல்…
வாளை எடுக்கும் போது…
அதில் வீரம் உன் காதல்…
பெண் : ஜன்னல் திறக்கும் போது…
வரும் காற்றில் உன் காதல்…
கண்கள் உறங்கும் போது…
வரும் கனவில் உன் காதல்…
ஆண் : உன் பேரைச் சொன்னாலே…
முத்தத்தின் சத்தங்கள்…
பெண் : நீ என்னைக் கண்டாலே…
தித்திக்கும் ரத்தங்கள்…
ஆண் : நீ போடும் ஒரு கோலத்திலே…
புள்ளியைப் போல் நான் இருந்தேனே…
பெண் : நீ பேசும் அந்த நேரத்திலே…
பறவையைப் போல் நான் பறந்தேனே…
ஆண் : நீ போகும் வழியெங்கும்…
நான்தானே ஆகாயமே…
—BGM—
ஆண் : பூஜா வா பூஜா வா…
பூஜைக்கு வந்த நிலவே வா…
—BGM—
ஆண் : விளக்கை மூடும் சிமிழாய்…
நான் உன்னை மூடுகிறேன்…
உன் மேல் விழுந்த வெயிலால்…
நான் சருகாய் மாறுகிறேன்…
பெண் : உந்தன் நினைப்பில்தானே…
நான் இன்னும் வாழுகிறேன்…
உந்தன் சிரிப்பில்தானே…
என் உதயம் காணுகிறேன்…
ஆண் : மீன் உன்னைக் கடித்தாலே…
ஆற்றுக்குத் தீ வைப்பேன்…
பெண் : மோகத்தீ மூட்டாதே…
ஆற்றுக்குள் நான் நிற்பேன்…
ஆண் : உன் மனதில் என்னை நிரப்பிவிடு…
உன் உலகில் என்னை பரப்பிவிடு…
பெண் : கடமைகளை நீ மறந்துவிடு…
கண்களிலே நீ இருந்துவிடு…
ஆண் : அன்பே உன் நிழல் கூட…
என் மீது விழ வேண்டுமே…
—BGM—
ஆண் : பூஜா… பூஜா வா பூஜா வா…
பூஜைக்கு வந்த நிலவே வா…
ஆண் : ரோஜா வா ரோஜா வா…
ஏதேன் தோட்டத்து ரோஜா வா…
உறங்கும் போதும் வாழும் நினைவே வா…
—BGM—
பெண் : தோளில் நீ தூங்கு…
உன் தூக்கம் நானாவேன்…
ஆண் : உன் மேல் பூ விழுந்தாலும்…
நான் உள்ளம் புண்ணாவேன்…
பெண் : உன்னோடு நான் வாழ்ந்தால்…
மரணத்தின் பயமில்லையே…
—BGM—
Notes : Pooja Vaa Pooja Vaa Song Lyrics in Tamil. This Song from Priyamudan (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. பூஜா வா பாடல் வரிகள்.