பொய்யிலே பிறந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திஆனந்த ஜோதி

Poiyyile Piranthu Song Lyrics in Tamil


பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…

BGM

பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
உம்மை புரிந்துகொண்டால் உண்மை தெரிந்து கொண்டால்…
இந்த பூவையர் குலமானே…

BGM

பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
உம்மை புரிந்துகொண்டால் உண்மை தெரிந்து கொண்டால்…
இந்த பூவையர் குலமானே…

பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…

BGM

ஆண் : பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த…
பூவையர் குலமானே…
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த…
பூவையர் குலமானே…

ஆண் : உன்னை புரிந்து கொண்டான்…
உண்மை தெரிந்துகொண்டான்…
இந்த புலவர் பெருமானே…

ஆண் : பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த…
பூவையர் குலமானே…

பெண் : உம்மை புரிந்துகொண்டால்…
உண்மை தெரிந்து கொண்டால்…
இந்த பூவையர் குலமானே…

பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…

BGM

பெண் : நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே…
வளர்ந்தது ஓர் உருவம்…

BGM

பெண் : நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே…
வளர்ந்தது ஓர் உருவம்…

ஆண் : இன்று நேரிலே வந்து மார்பிலே என்னை…
அணைப்பது உன் உருவம்…

BGM

ஆண் : நேரிலே வந்து மார்பிலே என்னை…
அணைப்பது உன் உருவம்…

பெண் : வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே…
காதல் கண்ணே உந்தன் சொந்தம்…

ஆண் : காதல் கிள்ளையே கையில் பிள்ளையே…
இந்த முல்லை எந்தன் சொந்தம்…

பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…

ஆண் : உன்னை புரிந்து கொண்டான்…
உண்மை தெரிந்துகொண்டான்…
இந்த புலவர் பெருமானே…

பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…

BGM

ஆண் : சற்றே சரிந்த குழலே அசைந்து…
தாவுது என்மேலே…

BGM

ஆண் : சற்றே சரிந்த குழலே அசைந்து…
தாவுது என்மேலே…

பெண் : அது தானே எழுந்து மேலே விழுந்து…
இழுக்குது வலைபோலே…

BGM

பெண் : அது தானே எழுந்து மேலே விழுந்து…
இழுக்குது வலைபோலே…

ஆண் : நெற்றி பொட்டிலே சூடும் பூவிலே…
காணும் யாவும் எந்தன் சொந்தம்…

பெண் : நெஞ்ச தட்டிலே என்னை கொட்டினேன்…
எந்தன் யாவும் உந்தன் சொந்தம்…

பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
உம்மை புரிந்துகொண்டால் உண்மை தெரிந்து கொண்டால்…
இந்த பூவையர் குலமானே…

பெண் : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…


Notes : Poiyyile Piranthu Song Lyrics in Tamil. This Song from Anandha Jodhi (1963). Song Lyrics penned by Kannadasan. பொய்யிலே பிறந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading