பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோகன் | தேவா | சந்தித்த வேலை |
Pen Kiliye Pen Kiliye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பெண் கிளியே பெண் கிளியே…
பாடுகிறேன் ஒரு பாட்டு…
என் பாட்டு வரி பிடித்திருந்தால்…
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு…
ஆண் : பெண் கிளியே பெண் கிளியே…
பாடுகிறேன் ஒரு பாட்டு…
என் பாட்டு வரி பிடித்திருந்தால்…
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு…
பெண் : வாய் மொழி எல்லாமே…
வாய்மை சொல்லாது…
உள்மனம் பேசாமல்…
உண்மைத் தோன்றாது…
ஆண் : வாய்மொழி எல்லாமே…
வாய்மை சொல்லாது…
பெண் கிளி பொய் சொன்னால்…
ஆண் கிளி தூங்காது…
பெண் : ஆண் கிளியே ஆண் கிளியே…
பாடுகிறேன் ஒரு பாட்டு…
பாட்டு வரி புரிந்து கொண்டால்…
உன் பல்லவியை நீ மாற்று…
—BGM—
ஆண் : பெண் கண்களே…
நாடகம் ஆடுமா…
பெண் நெஞ்சமே…
ஊடகம் ஆகுமா…
பெண் : யார் சொல்லியும்…
பெண் மனம் கேட்குமா…
கைத் தட்டினால்…
மொட்டுக்கள் பூக்குமா…
ஆண் : விடை கேட்டேன்…
கேள்வி தந்தாய்…
இது புதிரான புதிர் அல்லவா…
பெண் : கேள்விக்குள்ளே பதில் தேடு…
அது சுவையான சுவை அல்லவா…
ஆண் : உள்ளத்தின் வண்ணம்…
என்னத் தெரியவில்லை…
உடைத்துச் சொல்லும்…
வரைப் புரிவதில்லை…
பெண் : மூடாத பூவுக்குள்…
என்றும் தேன் இல்லை…
ஆண் : பெண் கிளியே பெண் கிளியே…
பாடுகிறேன் ஒரு பாட்டு…
என் பாட்டு வரி பிடித்திருந்தால்…
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு…
—BGM—
ஆண் : என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள்…
உன் காதிலே கேட்கவே இல்லையா…
பெண் : நீ ஆழிப் போல்…
அலைகளை ஏவினாய்…
நான் கரையைப் போல்…
மௌனமாய் மேவினேன்…
ஆண் : நெஞ்சில் பாசம்…
கண்ணில் வேஷம்…
இது பெண் பூசும் அறிதாரமா…
பெண் : உண்மைக் காண வன்மை இல்லை…
உங்கள் விழி என்மேல்…
பழி போடுமா…
ஆண் : நிலவைப் பிரிவதற்கு…
வலிமை உண்டு…
உன் நெஞ்சைப் புரிவதற்கு…
வலிமை இல்லை…
பெண் : கானல் நீர் தேடாதே…
அங்கே நீர் இல்லை…
பெண் : ஆண் கிளியே ஆண் கிளியே…
பாடுகிறேன் ஒரு பாட்டு…
பாட்டு வரி புரிந்து கொண்டால்…
உன் பல்லவியை நீ மாற்று…
ஆண் : பெண் கிளியே பெண் கிளியே…
பாடுகிறேன் ஒரு பாட்டு…
என் பாட்டு வரி பிடித்திருந்தால்…
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு…
—BGM—
Notes : Pen Kiliye Pen Kiliye Song Lyrics in Tamil. This Song from Sandhitha Velai (2000). Song Lyrics penned by Vairamuthu. பெண் கிளியே பெண் கிளியே பாடல் வரிகள்.