பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | காக்கிசட்டை (1985) |
Pattu Kannam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…
பெண் : தென்றல் வந்து என்னை கண்டு…
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா… ஹோஹோய்…
பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…
—BGM—
ஆண் : நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன் ஒரு நாள்…
உந்தன் பூவிதழ் ஈரத்தில் என்னை மறந்திருந்தேன் பல நாள்…
பெண் : வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல் தினமும்…
எந்தன் மோகத்தை நாணத்தில் மூடி மறைத்திருந்தேன் மனதில்…
ஆண் : நாணம் யாவும் நூலாடை…
நானே உந்தன் புது மேலாடை…
பெண் : மங்கை இவள் அங்கங்களில்…
உங்கள் கரம் தொடங்கலாம் நாடகமே… ஹோய் ஹோய்…
ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…
பெண் : தென்றல் வந்து என்னை கண்டு…
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா… ஹோஹோய்…
பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…
—BGM—
பெண் : கற்பனை கொஞ்சிடும் காவடி சந்தங்களே அடடா…
இந்த காவிய குயிலை பார்த்து எழுதியதோ தலைவா…
ஆண் : புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே கிளியே…
உந்தன் பூவுடல் பார்த்த பின் சிற்பம் வடித்தனரோ கனியே…
பெண் : ஆசை தீயை தூண்டாதே…
போதை பூவை தினம் தூவாதே…
ஆண் : அந்தியிலே வெள்ளி நிலா…
அள்ளி தரும் சுகங்களே ஆயிரமே… ஹோய் ஹோய்…
பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…
ஆண் : தென்றல் வந்து என்னை கண்டு…
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா… ஹோ ஹோய்…
பெண் : பட்டு கன்னம்…
ஆண் : தொட்டு கொள்ள…
பெண் : ஒட்டி கொள்ளும்…
ஆண் : ஒட்டி கொண்டு…
பெண் : கட்டி கொள்ள…
ஆண் : உள்ளம் துள்ளும்…
Notes : Pattu Kannam Song Lyrics in Tamil. This Song from Kakki Sattai (1985). Song Lyrics penned by Muthulingam. பட்டு கன்னம் பாடல் வரிகள்.