பாலும் பழமும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபாலும் பழமும்

Paalum Pazhamum Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…

BGM

ஆண் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : உண்ணும் அழகை பார்த்திருப்பாயே…
உறங்க வைத்தே விழித்திருப்பாயே…
உண்ணும் அழகை பார்த்திருப்பாயே…
உறங்க வைத்தே விழித்திருப்பாயே…

ஆண் : கண்ணை இமை போல் காத்திருப்பாயே…
காதற் கொடியே கண் மலர்வாயே…
கண்ணை இமை போல் காத்திருப்பாயே…
காதற் கொடியே கண் மலர்வாயே…

ஆண் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…

BGM

ஆண் : பிஞ்சு முகத்தின் ஒளி இழந்தாயே…
பேசிப் பழகும் மொழி மறந்தாயே…
பிஞ்சு முகத்தின் ஒளி இழந்தாயே…
பேசிப் பழகும் மொழி மறந்தாயே…

ஆண் : அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே…
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே…
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே…
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே…

ஆண் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…

BGM

ஆண் : ஈன்ற தாயை நான் கண்டதில்லை…
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை…
ஈன்ற தாயை நான் கண்டதில்லை…
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை…

ஆண் : உயிரை கொடுத்தும் உனை நான் காப்பேன்…
உதய நிலவே கண் துயில்வாயே…
உயிரை கொடுத்தும் உனை நான் காப்பேன்…
உதய நிலவே கண் துயில்வாயே…

ஆண் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…

BGM


Notes : Paalum Pazhamum Song Lyrics in Tamil. This Song from Palum Pazhamum (1961). Song Lyrics penned by Kannadasan. பாலும் பழமும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading