| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| தாமரை | சத்யபிரகாஷ் & சக்திஸ்ரீ கோபாலன் | ஹாரிஸ் ஜெயராஜ் | தேவ் |
Oru Nooru Murai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு நூறுமுறை வந்து போன பாதை…
அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை…
ஆண் : ஏன் என்று சொல் கண்ணே…
ஏன் வந்தேன் உன் பின்னே…
ஆண் : நெடுந்தூரம் முன்னே நீண்டு கொண்டே செல்ல…
ஒரு வார்த்தையாலே தூரத்தை நீ கொல்ல…
ஆண் : ஏதேனும் சொல் பெண்ணே…
நீ சொல்லும் சொல் தேனே…
பெண் : ம்ம்ம்… என்னை நீ எடுத்தாய் சிறை…
தாமரை பூ வருமோ தரை…
காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை…
பெண் : நெஞ்சுக்குள் நீ நினைக்கும் அதை…
நான் சொல்ல வேண்டுமென்றால் பிழை…
வேற் ஒன்றும் தோன்றவில்லை நான் மழலை…
ஆண் : ஒரு நூறுமுறை வந்து போன பாதை…
அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை…
ஆண் : ஏன் என்று சொல் கண்ணே…
ஏன் வந்தேன் உன் பின்னே…
—BGM—
பெண் : நான் மழையினில் நனைத்தது இல்லை…
ஓ மதுவினில் குளித்தது இல்லை…
நான் மரகத மலைகளை பார்க்க…
என் கனவிலும் வாய்த்தது இல்லை…
பெண் : விலாவில் சிறகுகள் கண்டேன்…
உலாவ உன்னுடன் வந்தேன்…
எழுந்தேன் விழுந்தேன் கரைந்தேன்…
ஆண் : ஒரு நூறுமுறை வந்து போன பாதை…
அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை…
ஆண் : ஏன் என்று சொல் கண்ணே…
ஏன் வந்தேன் உன் பின்னே…
—BGM—
ஆண் : நீ பறந்திடும் உயரத்தில் இருந்து…
குழு : இருந்து…
ஆண் : ஓ பார்வையின் பார்வையில் பார்த்தாய்…
குழு : பார்த்தாய்…
ஆண் : ஆ சிறு சிறு உருவங்கள் விரைந்து…
குழு : விரைந்து…
ஆண் : ஓ நகர்வதை எறும்பென நினைத்தாய்…
ஆண் : எல்லாமே நடக்குது இன்று…
உனக்கும் பிடிக்கிது நன்று…
பெண் : ம்ம்ம்… மறந்தேன் எனை நான் இழந்தேன்…
பெண் : இது போலே எந்த நாளும் என்றும் இல்லை…
இனி மேலும் வரும் என்று நம்பவில்லை…
பெண் : வான் எங்கும்…
குழு : ஹே ஹே…
பெண் : ஓ கார்மேகம்…
குழு : ஹே…
பெண் : வான் என்றால்…
குழு : ஹே ஹே…
பெண் : ஹே நீர் வார்க்கும்…
குழு : ஹே…
ஆண் : ஒரு தோகை மயில் தொற்றி கொண்ட தோளில்…
மழை ஈரம் வந்து சாரல் வீசும் நாளில்…
ஆண் : ஏதேனும் சொல் பெண்ணே…
நீ சொல்லும் சொல் தேனே…
பெண் : ஓ ஏன் என்னை நீ எடுத்தாய் சிறை…
தாமரை பூ வருமா தரை…
காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை…
ஆண் : நெஞ்சுக்குள் நீ நினைக்கும் அதை…
நீ சொல்லவில்லை என்றால் பிழை…
போகட்டும் நம்பிவிட்டேன் நீ மழலை…
—BGM—
Notes : Oru Nooru Murai Song Lyrics in Tamil. This Song from Dev (2019). Song Lyrics penned by Thamarai. ஒரு நூறுமுறை பாடல் வரிகள்.


