பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
நூர்மதிதாசன் | நாகூர் இ.எம்.ஹனிஃபா | கே.எஸ்.ஜெய்சா | இஸ்லாமிய பக்தி பாடல்கள் |
Oru Naal Madeena Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒருநாள் மதீனா நகர் தனிலே…
ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே…
ஒருநாள் மதீனா நகர் தனிலே…
ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே…
ஆண் : பெருமான் நபிகள் பகர்ந்தார்கள்…
பெருமான் நபிகள் பகர்ந்தார்கள்…
பண்புடன் தோழர்கள் மத்தியிலே…
ஆண் : ஒருநாள் மதீனா நகர் தனிலே…
ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே…
—BGM—
ஆண் : உதய நிலவின் குளிராக…
உலகில் தோன்றிய உம்மி நபி…
உதய நிலவின் குளிராக…
உலகில் தோன்றிய உம்மி நபி…
ஆண் : நீதி மறையின் திரு உருவாய்…
நிதமும் வாழ்ந்த தூதர் சொன்னார்…
இறுதி நாள் நெருங்கி வருகிறது…
இறைவன் அழைப்பும் தெரிகிறது…
கருணை இறைவன் சொல் கேட்டு…
கடமையை செய்ததில் குறையுள்ளதோ…
ஆண் : ஒருநாள் மதீனா நகர் தனிலே…
ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே…
—BGM—
ஆண் : யாருக்கும் தவறுகள் செய்தேனோ…
எவருக்கும் துன்பம் தந்தேனோ…
யாருக்கும் தவறுகள் செய்தேனோ…
எவருக்கும் துன்பம் தந்தேனோ…
ஆண் : கூறுங்கள் அன்பு தோழர்களே…
குறைகள் இருந்தால் கூறுங்கள்…
எப்போதேனும் சிறு பிழைகள்…
என் வாழ்வில் ஏதும் செய்தேனோ…
தப்பாது இங்கே சொல்லிடுவீர்…
தயங்காமல் அதனை ஏற்றிடுவேன்…
ஆண் : ஒருநாள் மதீனா நகர் தனிலே…
ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே…
—BGM—
ஆண் : அது கேட்ட தோழர்கள் நெஞ்சங்கள்…
அதிர்ந்தது அங்கமெல்லாம் நடுங்கியே…
அது கேட்ட தோழர்கள் நெஞ்சங்கள்…
அதிர்ந்தது அங்கமெல்லாம் நடுங்கியே…
ஆண் : நீதி தவறாத நாயகமே…
தாங்கள் நன்மையின்றி தீமை செய்ததில்லை…
அப்போது ஒருவர் எழுந்து நின்றார்…
அவர்தான் உகாஷா எனும் தோழர்…
ஒப்பில்லாத இறை தூதே…
ஓர் குறை எனக்கு உண்டு என்றார்…
—BGM—
ஆண் : சொன்னதும் ஸஹாபா பெருமக்கள்…
சினத்தால் துடித்து எழுந்தார்கள்…
சொன்னதும் ஸஹாபா பெருமக்கள்…
சினத்தால் துடித்து எழுந்தார்கள்…
ஆண் : அண்ணல் பெருமான் அமைதியுடன்…
ஆத்திரம் வேண்டாம் அமர்க என்றார்…
என்ன குறைகள் இருந்தாலும்…
இயம்புக அதனை நீக்கிடலாம்…
திண்ணமாய் அல்லாஹ் அறிந்திடுவான்…
தீமைகளின்றி காத்திடுவான்…
—BGM—
ஆண் : உத்தம நபியே இரஸூலே…
ஒட்டகை மேல் தாங்கள் இருக்கையிலே…
உத்தம நபியே இரஸூலே…
ஒட்டகை மேல் தாங்கள் இருக்கையிலே…
ஆண் : சித்த மகிழ்வோடு நான் பிடித்து…
சீராய் மணலில் நடக்கையிலே…
சாட்டையை சுழற்றி ஒட்டகையை…
சட்டென தாங்கள் அடித்தீர்கள்…
ஒட்டி நடந்த என் உடம்பில்…
ஓரடி விழுந்தது அப்போது…
—BGM—
ஆண் : அதற்கு பதிலாய் தங்களை நான்…
அடித்திட அனுமதி வேண்டுகிறேன்…
அதற்கு பதிலாய் தங்களை நான்…
அடித்திட அனுமதி வேண்டுகிறேன்…
ஆண் : எதிலும் நீதி தவறாத…
இரஸூல் நபியதை ஏற்றார்கள்…
உண்மை உரைத்தீர் என் தோழரே…
உமது உள்ளம் சாந்தி பெற…
என்னை அடியும் என்றார்கள்…
இசைவாய் அங்கே நின்றார்கள்…
—BGM—
ஆண் : என்னை அடித்த சாட்டை இங்கே…
இல்லே தங்களின் வீட்டில் உண்டு…
என்னை அடித்த சாட்டை இங்கே…
இல்லே தங்களின் வீட்டில் உண்டு…
ஆண் : எண்ணம் நிறைவேற வேண்டுமதை…
ஏந்தலே எடுத்து வர சொல்லுங்கள்…
இனிய பிலாலே ஏகிடுவீர்…
எடுத்து வாரும் சாட்டை தனை…
கண்ணீரோடு பிலால் விரைந்தார்…
கருணை நபியின் இல்லத்துக்கே…
—BGM—
ஆண் : அங்கே அன்னை ஃபாதிமாவும்…
ஆருயிர் மக்கள் ஹஸன் ஹூஸைனும்…
அங்கே அன்னை ஃபாதிமாவும்…
ஆருயிர் மக்கள் ஹஸன் ஹூஸைனும்…
ஆண் : பாங்காய் மூவரும் வீட்டினிலே…
பண்பின் உரைவிடமாய் திகழ்ந்தார்…
பாச மிகுந்த அன்பர் பிலால்…
பரிவுடன் ஃபாதிமா எதிர் நின்று…
நேசம் தவழ்ந்திடும் சபைதனிலே…
நடந்ததை நயமுடன் எடுத்துரைத்தார்…
—BGM—
ஆண் : செய்தியை செவியில் கேட்டவுடன்…
சிந்தையில் வேதனை பொங்கியது…
செய்தியை செவியில் கேட்டவுடன்…
சிந்தையில் வேதனை பொங்கியது…
ஆண் : தூய என் தந்தை உடல் நலமில்லை…
தண்டனை எப்படி தாங்கிடுவார்…
ஏன்றே கூறி சாட்டை தனை…
ஏடுத்து பிலாலிடம் தரும் போது…
நன்றே சொல்லும் உகாஷாவிடம்…
நானே அடியை ஏற்றிடுவேன்…
—BGM—
ஆண் : அருமை குழந்தைகள் ஹஸன் ஹூஸைனும்…
அழுது கண்ணீர் வடித்தார்கள்…
அருமை குழந்தைகள் ஹஸன் ஹூஸைனும்…
அழுது கண்ணீர் வடித்தார்கள்…
ஆண் : பெருமை நிறைந்த பாட்டனாருக்கு…
பதிலாய் எங்களை அடிக்கட்டுமே…
துயரம் மேலிட சாட்டைதனை…
துhpதமுடன் பிலால் எடுத்து சென்றார்…
பயமில்லாது உகாஷாவிடம்…
பெருமான் நபிகள் கொடுத்தார்கள்…
—BGM—
ஆண் : சாட்டையை கையில் வாங்கியதும்…
சாந்த நபியிடம் அவர் சொன்னார்…
சாட்டையை கையில் வாங்கியதும்…
சாந்த நபியிடம் அவர் சொன்னார்…
ஆண் : சட்டையில்லாது நான் இருந்தேன்…
செம்மலே தாங்கள் அடிக்கயிலே…
கேட்டதும் ஹாத்தமுன் நபியவர்கள்…
பணிவுடன் சட்டையை நீக்கியதும்…
சாட்டையை தூக்கி எறிந்து விட்டு…
தாவியனைத்தார் ஆவலுடன்…
—BGM—
ஆண் : நுபுவத்தொளிரும் நபி முதகில்…
நினைத்தது போல முத்தமிட்டார்…
நுபுவத்தொளிரும் நபி முதகில்…
நினைத்தது போல முத்தமிட்டார்…
ஆண் : உணர்ச்சி உள்ளம் குளிர்ந்திடவே…
உவகையில் மீண்டும் முத்தமிட்டார்…
சுற்றிலும் நின்ற ஸஹாபாக்கள்…
சோபனம் கூறி வாழ்த்தினரே…
மட்டில்லாத மகிழ்ச்சியிலே…
மஸ்ஜிதுந்நபவி திளைத்திடுமே…
—BGM—
குழு : ஸல்லல்லாஹூ அலா முஹம்மது…
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்…
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது…
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்…
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது…
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்…
Notes : Oru Naal Madeena Song Lyrics in Tamil. This Song from Islamic Devotional Songs. Song Lyrics penned by Noormathidasan. ஒருநாள் மதீனா பாடல் வரிகள்.