பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சினேகன் | எஸ்.பி.பாலசுப்ரமணியம் | தேவா | சொக்கத்தங்கம் |
Oor Oora Pogura Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே…
என் பைங்கிளி போகக் கண்டீரோ…
ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே…
என் தாமரைப் பூவைக் கண்டீரோ…
ஆண் : போன தெச புரியலையே…
பொசுங்குதடி எம் மனசு…
புங்கமரக் கிளை தொங்க…
தூண்டுதடி என் உசுரு…
நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயடி…
ஆண் : ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே…
என் பைங்கிளி போகக் கண்டீரோ…
—BGM—
ஆண் : பட்டா போட்டு என்னைத்தானே பதிவாக்கி வச்சாளே…
பாதியிலே வீதி நிறுத்தவா…
சிக்கிமுக்கி கண்ணால்தானே தீயை பற்ற வச்சாளே…
தீயில் என்னை வாட்டி எடுக்கவா…
ஆண் : அவ நாகப் பாம்பா பாஞ்சிருந்தால்…
நெனவு தப்பி சாஞ்சிருப்பேன்…
அவ சாரல் பாம்பா பாஞ்சதனால்…
சிறுக சிறுக சாகுறேனே…
கண்ணம்மா மனம் கல்லாம்மா பதில் நீ கூறம்மா…
—BGM—
ஆண் : செக்கிழுக்கும் மாட்டைப் போல…
என்னைச் சுத்தி வந்தாயே…
செக்கில் என்னை ஆட்டி பார்ப்பதேன்…
ஆண் : ஈ எறும்ப கொன்னா கூட பாவமுன்னு சொன்னாயே…
என்னைக் கொன்னு மண்ணில் புதைப்பதேன்…
ஆண் : என் நெஞ்சுல வாளை வீசியிருந்தா…
வீர மரணம் கெடைச்சிருக்கும்…
என் முதுகுல வாளை வீசியதால்…
மானம் இழந்து சாகுறேனே…
தாயம்மா இந்த காயம்தான் இனி ஆறாதம்மா…
—BGM—
ஆண் : ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே…
என் பைங்கிளி போகக் கண்டீரோ…
ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே…
என் தாமரைப் பூவைக் கண்டீரோ…
ஆண் : போன தெச புரியலையே…
பொசுங்குதடி எம் மனசு…
புங்கமரக் கிளை தொங்க…
தூண்டுதடி என் உசுரு…
நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயடி…
—BGM—
Notes : Oor Oora Pogura Song Lyrics in Tamil. This Song from Chokka Thangam (2003). Song Lyrics penned by Snehan. ஊர் ஊரா போகுற பாடல் வரிகள்.