பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் | எஸ். ஏ. ராஜ்குமார் | ப்ரியமானவளே |
Kalyanam Enbathu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கார்யேசுதாசி… கரனேசு மந்திரி…
போஜேசு மாதா… சயனேசு ரம்பா…
ஆண் : கல்யாணம் என்பது பூர்வ பந்தம்…
உடலோடுயிர் குடியேறிட வாழும் சொந்தம்…
சம்சாரம் என்பது ஆதி அந்தம்…
ஒன்றாகிடும் உறவாடிடும் அன்பால் என்றும்…
ஆண் : எழேழு ஜன்மமே மணமாலை பந்தமே…
ஆயிரம் காலமே வாழுமே…
—BGM—
ஆண் : வெளிச்சமாகும் வீடு பெண் விளக்கேற்றினால்…
வெற்றியாகும் வாழ்வு பெண் வழிகாட்டினால்…
விலகி போகும் மோகம் பெண் விரல் தீண்டினால்…
தெய்வம் கூட இளகும் பெண் வரம் வேண்டினால்…
இங்கு ஆணின் பின்பலம் என்றும் ஆகும் பெண்பலம்…
ஆண் : நீ ஏது நான் ஏது இங்கே…
நம்மையெல்லாம் சுமந்தவள் யாரடா…
ஆண் : கல்யாணம் என்பது பூர்வ பந்தம்…
உடலோடுயிர் குடியேறிட வாழும் சொந்தம்…
—BGM—
ஆண் : தலைவன் கூடும் போது பெண் விருந்தாகிறாள்…
தலைவன் வாடும்போது பெண் மருந்தாகிறாள்…
தலைவன் கொஞ்சும் போது பெண் சேயாகிறாள்…
தலைவன் துஞ்சும் போது பெண் தாயாகிறாள்…
ஆண் : பெண்ணின் பெருமை சொல்லவா…
கடல் போன்றதல்லவா…
நீர் வாழ நீர் வார்க்கும் மேகம்…
அதற்கொரு உவமை தான் பெண்மையே…
ஆண் : கார்யேசுதாசி… கரனேசு மந்திரி…
போஜேசு மாதா… சயனேசு ரம்பா…
Notes : Kalyanam Enbathu Song Lyrics in Tamil. This Song from Priyamaanavale (2000). Song Lyrics penned by Vaali. கல்யாணம் என்பது பாடல் வரிகள்.