பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே. பாக்யராஜ் | கே. பாக்யராஜ் | தென்பாண்டி சீமையிலே |
Oodhura Sangha Song Lyrics in Tamil
ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…
—BGM—
ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…
—BGM—
ஆண் : கொட்டினாத்தான் தேள ஊரு மதிக்கும்…
இல்ல புள்ளப் பூச்சியின்னு போட்டு மிதிக்கும்…
—BGM—
ஆண் : குட்ட குட்ட குனிஞ்சா என்ன நடக்கும்…
கொஞ்சம் தட்டிக் கேளு அப்போ நீதி கிடைக்கும்…
ஆண் : சூடு ஒண்ணு போட்டு வச்சா…
மாட்டுக்கொரு சொரணை வரும்…
சொல்லு ஒண்ணு சொல்லிப்புட்டா…
யாருக்குமே ரோஷம் வரும்…
பொல்லாப்ப விட்டுப்புட்டு எல்லாரும் ஒண்ணுப்பட்டு…
புரட்சி பாதையில் எழுச்சி காணவே…
ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…
—BGM—
ஆண் : ஏணியைப் போல ஊர ஏத்திவிடணும்…
ஆனா எட்டி உதைப்பவன முட்டித் தட்டணும்…
—BGM—
ஆண் : தோணியைப் போல் பலரை சுமந்திடனும்…
ஆனா கவுக்க நெனைப்பவன ஆத்தில் விடணும்…
ஆண் : நல்லவங்க பேரை தினம்…
ஊருக்குள்ள நாம் சொல்லலாம்…
ஆனா நல்ல நல்ல காரியத்த…
நாம கூட செஞ்சுக் காட்டணும்…
வீண் வம்பு பேசிக்கிட்டு…
வெறும் வாய மென்னுக்கிட்டு…
கோஷம் போடுறவன் வேஷம் கலையவே…
ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…
—BGM—
ஆண் : நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்
ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
Notes : Oodhura Sangha Song Lyrics in Tamil. This Song from Thenpandi Seemayile (1988). Song Lyrics penned by Vaali. ஊதுற சங்க பாடல் வரிகள்.