ஒரு கிளி சிரிக்குதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிகே. பாக்யராஜ்தென்பாண்டி சீமையிலே

Oru Kizhi SiriKuthadi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…

பெண் : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
இனி இரவுகள் பகலென மாறும்…
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்…

பெண் : இரு கண்ணும் தூங்காது…
நெஞ்சும் தாங்காது…
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது…

குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…

BGM

பெண் : வளையல் சத்தம் கேட்டாலே…
குழு : வருவான் வருவான்…

BGM

பெண் : உதட்டில் ஒன்னு பூப்போலே…
குழு : தருவான் தருவான்…

பெண் : நீ வெட்கத்தில் ஒதுங்கிட ஒதுங்கிட…
ஓர் அச்சத்தில் பதுங்கிட பதுங்கிட…

பெண் : இரவும் பகலும் போராடலாம்…
இளமை நதியில் நீராடலாம்…
பழமொடு பால் பருகிடும் நாள்…
குலுங்கி குலுங்கி மலர் கட்டில் கூத்தாட…

குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…

பெண் : இனி இரவுகள் பகலென மாறும்…
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்…

பெண் : இரு கண்ணும் தூங்காது…
நெஞ்சும் தாங்காது…
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது…

குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…

BGM

பெண் : தலைவி மனம் வாடாமல்…
குழு : மெதுவா மெதுவா…

BGM

பெண் : மயங்கும்படி விளையாடு…
குழு : தலைவா தலைவா…

பெண் : நீ வேகத்தில் வளைத்திட வளைத்திட…
பூந்தேகத்தில் வலித்திட வலித்திட…

பெண் : உரசும் பொழுது என்னாகுமோ…
உதடும் உடலும் புண்ணாகுமோ…
சிறு விழிதான் சிவந்திடத்தான்…
எடுக்க எடுக்க அது என்றும் தீராது…

குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…

பெண் : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
இனி இரவுகள் பகலென மாறும்…
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்…

பெண் : இரு கண்ணும் தூங்காது…
நெஞ்சும் தாங்காது…
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது…

குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…


Notes : Oru Kizhi SiriKuthadi Song Lyrics in Tamil. This Song from Thenpandi Seemayile (1988). Song Lyrics penned by Vaali. ஒரு கிளி சிரிக்குதடி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top