ஓ பறவைகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாரவி தேவேந்திரன்புதிய தென்றல்

Oh Paravaigale Paravaigale Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…

BGM

ஆண் : ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…
என் பாலைவனம் மழை பெறுமா சொல்லுங்கள்…

ஆண் : நான் ஒரு கரையில் அவளோ மறுகரையில்…
கிளிபோல் சிறகிருந்தும் கிடந்தோம் இரு சிறையில்…
வழிதான் கிடையாதா அடிவானம் முடியாதா…

பெண் : ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…
என் பாலைவனம் மழை பெறுமா சொல்லுங்கள்…

BGM

பெண் : புன்னகை ஓய்ந்து பூவும் காய்ந்து…
இன்று நான் துடித்தேன்…

ஆண் : கண்மணி எங்கே காணவில்லை…
கண்ணில் நீர் வடித்தேன்…

பெண் : நினைப்புதான் நெஞ்சில் வந்து துடிக்குது கொஞ்சம்…
ஆண் : நினைப்பதை நிறுத்தினால் தவித்திடும் நெஞ்சம்…

பெண் : தொட்டுப்பேச ஒரு கட்டுப்பாடு…
ஆண் : வெளியே சொன்னால் அடி வெட்கக்கேடு…
பெண் : அட அன்புக்கா தட்டுப்பாடு…

ஆண் : ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…
பெண் : என் பாலைவனம் மழைபெறுமா சொல்லுங்கள்…

BGM

ஆண் : காதலைப்போலே இன்பம் இல்லை…
அன்று நாம் கண்டது…

பெண் : காதலைப்போலே துன்பமும் இல்லை…
இன்று நாம் காண்பது…

ஆண் : உணர்ச்சிகள் அடிக்கடி துடிக்குது கண்ணே…
பெண் : ஒருதரம் அணைக்கனும் இறக்கனும் பின்னே…

ஆண் : காணல் நீரில் இரு தூண்டில் போட்டோம்…
பெண் : இன்று கண்ணீர் ஆற்றில் ஒரு தோட்டம் போட்டோம்…
ஆண் : நாம் காலத்தின் கண்ணீரானோம்…

பெண் : ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…
என் பாலைவனம் மழை பெறுமா சொல்லுங்கள்…

ஆண் : நான் ஒரு கரையில் அவளோ மறுகரையில்…
கிளிபோல் சிறகிருந்தும் கிடந்தோம் இரு சிறையில்…

பெண் : வழிதான் கிடையாதா அடிவானம் முடியாதா…

ஆண் : ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…
பெண் : என் பாலைவனம் மழைபெறுமா சொல்லுங்கள்…


Notes : Oh Paravaigale Paravaigale Song Lyrics in Tamil. This Song from Pudhiya Thendral (1993). Song Lyrics penned by Vairamuthu. ஓ பறவைகளே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top