பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | ஷான் | டி. இமான் | மாசிலாமணி |
O Divya O Divya Song Lyrics in Tamil
ஆண் : ஓ திவ்யா ஓ திவ்யா…
நீ நடமாடும் நைல் நதியா…
என் நெஞ்சின் ஓரம் ஆடவா…
—BGM—
ஆண் : ஓ திவ்யா ஓ திவ்யா…
நீ கவி பாடும் புது நிலவா…
உன் சொல்லில் வேதம் தேடவா…
ஆண் : உன் கண்கள் ஓரமாய் வந்து…
என் ஆயுள் ரேகையில் நின்று…
தினம் தவம் செய்யும் பலம் சேர்ப்பாயா…
ஆண் : உன் பாத கொலுசுகள் ஓசை…
அதை பதிவு செய்யவே ஆசை…
திரு முகம் காட்டி உயிர் காப்பாயா…
ஆண் : ஓ திவ்யா ஓ திவ்யா…
நீ நடமாடும் நைல் நதியா…
என் நெஞ்சின் ஓரம் ஆடவா…
ஆண் : ஏய் ஏய் யே…
ஓ திவ்யா ஓ திவ்யா…
நீ கவி பாடும் புது நிலவா…
உன் சொல்லில் வேதம் தேடவா…
—BGM—
ஆண் : எனக்காக என்னை பற்றி யோசிக்கதான் நீ வந்தாய்…
அழகாக என்னை மாற்றி உருவம் நீ தந்தாய்…
—BGM—
ஆண் : வெறும் கல்லாய் வாழும் என்னை தொட்டு…
சிற்பம் செய்கிறாய்…
சிறு முள்ளாய் ஆகும் என்னை அள்ளி…
ஆடை நெய்கிறாய்…
ஆண் : இயல்பாக பேசும் போது…
எனக்கே தெரியாமல்தான்…
உன் பேரை சொல்லி போகிறேன்… யே யே யே…
ஆண் : இனிப்பான சுமைகள் தூக்கி…
சுவர் ஏறும் எரும்பை போல…
உன் காதல் ஏற்றி செல்கிறேன்…
ஆண் : ஓ திவ்யா ஓ திவ்யா…
நீ நடமாடும் நைல் நதியா…
என் நெஞ்சின் ஓரம் ஆடவா…
ஆண் : ஓ திவ்யா ஓ திவ்யா…
நீ கவி பாடும் புது நிலவா…
உன் சொல்லில் வேதம் தேடவா…
—BGM—
ஆண் : முதல் பார்வை அதிலே சிக்கி…
இன்னும் வெளியே வரவில்லை…
அதற்குள்ளே மீண்டும் பார்த்தாய்…
ஐயோ முடியவில்லை…
—BGM—
ஆண் : உன் நாசியில் தவழும்…
மூச்சில் உயிரும் விக்கி நின்றதே…
உன் நாபி கமலம் அங்கே கண்கள்…
சிக்கி கொண்டதே…
ஆண் : மிருதுவான மஞ்சள் பெண்ணே…
ருதுவான கொஞ்சல் கண்ணே…
உனக்காகதானே வாழ்கிறேன்…
ஆண் : நூற்றாண்டு கடிதம் போல…
உதிர்கின்ற எந்தன் மனசை…
உனக்காக திறந்து வைக்கிறேன்…
ஆண் : ஓ திவ்யா ஓ திவ்யா…
நீ நடமாடும் நைல் நதியா…
என் நெஞ்சின் ஓரம் ஆடவா…
ஆண் : உன் கண்கள் ஓரமாய் வந்து…
என் ஆயுள் ரேகையில் நின்று…
தினம் தவம் செய்யும் பலம் சேர்ப்பாயா…
ஆண் : உன் பாத கொலுசுகள் ஓசை…
அதை பதிவு செய்யவே ஆசை…
திரு முகம் காட்டி உயிர் காப்பாயா…
—BGM—
Notes : O Divya O Divya Song Lyrics in Tamil. This Song from Masilamani (2009). Song Lyrics penned by Pa. Vijay. ஓ திவ்யா ஓ திவ்யா பாடல் வரிகள்.