டோரா டோரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபல்ராம் & கல்யாணி பிரதீப்டி. இமான்மாசிலாமணி

Dora Dora Song Lyrics in Tamil


BGM

ஆண் : டோரா டோரா அன்பே டோரா…
உனக்கு என்ன அழகே ஊரா…
நீ என்ன பூக்களின் தேசமா…

பெண் : டோரா டோரா அன்பே டோரா…
மனசும் மனசும் பேசுது ஜோரா…
நீ என்ன என்னுயிர் சுவாசமா…

ஆண் : உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே…
என் உயிரின் துண்டாகும்…

பெண் : உன் ஸ்பரிசத்தில் நிற மாற்றங்கள்…
என் மேலே உண்டாகும்…

ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி…
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி…

ஆண் : டோரா டோரா அன்பே டோரா…
உனக்கு என்ன அழகே ஊரா…
நீ என்ன பூக்களின் தேசமா…

பெண் : டோரா டோரா அன்பே டோரா…
மனசும் மனசும் பேசுது ஜோரா…
நீ என்ன என்னுயிர் சுவாசமா…

BGM

பெண் : இது இது இது இது காதலா…
என் இதயத்திலே ஒரு கூக்குரல்…
அது அது அது அது காதல்தான்…
எனை தடவியதே உன் பூவிதழ்…

ஆண் : பூக்கூடை போலேதான் என் வசம் மோதினாய்…
கூழாங்கல் போலேதான் உடைகிறேன் ஏந்தினாய்…

பெண் : இதயம் எங்கே இயங்கும் என்று…
உன்னால் கண்டேன் இப்போதே…

ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி…
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி…

பெண் : டோரா டோரா அன்பே டோரா…
மனசும் மனசும் பேசுது ஜோரா…
நீ என்ன என்னுயிர் சுவாசமா…

BGM

பெண் : ஒரு ஒரு ஒரு ஒரு சமயத்தில்…
என் மனதினிலே உன் நியாபகம்…
சில சில சில சில நேரத்தில்…
பொய் கோபத்தை காட்டிடும் உன் முகம்…

ஆண் : யார் கண்கள் பார்த்தாலும் உன்னை போல் தோன்றுதே…
ஐய்யயோ கிறுக்கா நீ என் மனம் திட்டுதே…

பெண் : உனக்கும் கூட உனக்கும் கூட…
இதுபோல் மாற்றம் உண்டாச்சோ…

ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி…
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி…

பெண் : டோரா டோரா அன்பே டோரா…
மனசும் மனசும் பேசுது ஜோரா…
நீ என்ன என்னுயிர் சுவாசமா…

ஆண் : உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே…
என் உயிரின் துண்டாகும்…

பெண் : உன் ஸ்பரிசத்தில் நிற மாற்றங்கள்…
என் மேலே உண்டாகும்…

ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி…
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி…

BGM


Notes : Dora Dora Song Lyrics in Tamil. This Song from Masilamani (2009). Song Lyrics penned by Viveka. டோரா டோரா பாடல் வரிகள்.


Scroll to Top