நிழலோ நிஜமோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபாடும் பறவைகள்

Nizhalo Nijamo Song Lyrics in Tamil


BGM

பெண் : நிழலோ நிஜமோ என்று போராட்டமோ…
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ…
திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ…
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ…

BGM

பெண் : திசையை தேடி தவிக்கின்றேன்…
சிறகை தேடி பறக்கின்றேன்…
கண்ணீரில் நீராடினேன்…

பெண் : திசையை தேடி தவிக்கின்றேன்…
சிறகை தேடி பறக்கின்றேன்…
கண்ணீரில் நீராடினேன்…

பெண் : பூவில் போட்ட மஞ்சம் அங்கே…
முள்ளில் செய்த பாதை இங்கே…
தர்மம் இங்கு தோல்வி கண்டால்…
கேள்வி கேட்க தெய்வம் எங்கே…
வாடை காற்று வந்தாலும் மனதில் பயமே எழுமே…

பெண் : நிழலோ நிஜமோ என்று போராட்டமோ…

BGM

பெண் : மரணத்தின் வாடை அடிக்கின்றதே…
மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே…
பூகம்பம் உண்டானதே…

பெண் : மரணத்தின் வாடை அடிக்கின்றதே…
மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே…
பூகம்பம் உண்டானதே…

பெண் : வாழ்வை தேடி வந்தோம் இங்கே…
சாவு நம்மை தேடும் இங்கே…
கன்னி மானைக் காட்டில் பார்த்து…
கண்ணி வைத்த வேடன் எங்கே…
இந்த நேரம் என்னாகும் தினமே கலங்கும் மனமே…

பெண் : நிழலோ… நிஜமோ…
என்று போராட்டமோ…
திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ…

பெண் : நிழலோ… நிஜமோ…
என்று போராட்டமோ…


Notes : Nizhalo Nijamo Song Lyrics in Tamil. This Song from Paadum Paravaigal (1985). Song Lyrics penned by Vairamuthu. நிழலோ நிஜமோ பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top