பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். ஜானகி & எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | பாடும் பறவைகள் |
Nizhalo Nijamo Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நிழலோ நிஜமோ என்று போராட்டமோ…
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ…
திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ…
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ…
—BGM—
பெண் : திசையை தேடி தவிக்கின்றேன்…
சிறகை தேடி பறக்கின்றேன்…
கண்ணீரில் நீராடினேன்…
பெண் : திசையை தேடி தவிக்கின்றேன்…
சிறகை தேடி பறக்கின்றேன்…
கண்ணீரில் நீராடினேன்…
பெண் : பூவில் போட்ட மஞ்சம் அங்கே…
முள்ளில் செய்த பாதை இங்கே…
தர்மம் இங்கு தோல்வி கண்டால்…
கேள்வி கேட்க தெய்வம் எங்கே…
வாடை காற்று வந்தாலும் மனதில் பயமே எழுமே…
பெண் : நிழலோ நிஜமோ என்று போராட்டமோ…
—BGM—
பெண் : மரணத்தின் வாடை அடிக்கின்றதே…
மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே…
பூகம்பம் உண்டானதே…
பெண் : மரணத்தின் வாடை அடிக்கின்றதே…
மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே…
பூகம்பம் உண்டானதே…
பெண் : வாழ்வை தேடி வந்தோம் இங்கே…
சாவு நம்மை தேடும் இங்கே…
கன்னி மானைக் காட்டில் பார்த்து…
கண்ணி வைத்த வேடன் எங்கே…
இந்த நேரம் என்னாகும் தினமே கலங்கும் மனமே…
பெண் : நிழலோ… நிஜமோ…
என்று போராட்டமோ…
திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ…
பெண் : நிழலோ… நிஜமோ…
என்று போராட்டமோ…
Notes : Nizhalo Nijamo Song Lyrics in Tamil. This Song from Paadum Paravaigal (1985). Song Lyrics penned by Vairamuthu. நிழலோ நிஜமோ பாடல் வரிகள்.