| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | சுஜாதா மோகன், ஹரிஹரன் & ஹரிணி | தேவா | அப்பு |
Ninaithal Nenjukuzhi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ…
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…
பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ…
பெண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது ஏனோ…
புடவை அடிக்கடி நழுவும் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…
பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ…
—BGM—
பெண் : பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதேனோ…
ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ…
ஆண் : மொழியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ…
பெண் : வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ…
மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ…
ஆண் : அஞ்சுக்கும் ஆறுக்குமே இடைவெளி ஏனோ ஏனோ…
நெஞ்சுக்கும் உதட்டுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ…
ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ…
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…
பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ…
—BGM—
ஆண் : நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ…
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ…
பெண் : வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ…
ஆண் : கால் விரல் ஓவியம் எழுதுதே ஏனோ…
கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ…
பெண் : இமைகையில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ…
நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ…
ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ…
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…
பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ…
—BGM—
Notes : Ninaithal Nenjukuzhi Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. நினைத்தால் நெஞ்சுகுழி பாடல் வரிகள்.

