இடம் தருவாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபாப் ஷாலினி & பி. உன்னிகிருஷ்ணன்தேவாஅப்பு

Idam Tharuvaya Manasukkulle Song Lyrics in Tamil


BGM

ஆண் : இடம் தருவாயா மனசுக்குள்ளே…
இடம் தருவாயா மனசுக்குள்ளே…

பெண் : தரமாட்டேன் தரமாட்டேன்…
இடம் தரமாட்டேன்…
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்…

ஆண் : பகலில் உன் வீட்டில் காவலன் ஆவேன்…
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்…
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே…

ஆண் : இடம் தருவாயா மனசுக்குள்ளே…
குழு : யே யே யே யே…
ஆண் : இடம் தருவாயா மனசுக்குள்ளே…
குழு : யே யே யே யே…

BGM

பெண் : இதய வீட்டில் ஓர் இடம்…
நீ கெஞ்சிக் கேக்கிறாய்…
வீட்டின் உள்ளே காற்றில்லை என்றால்…
என் செய்வாய்…

BGM

ஆண் : இதய வீட்டில் காற்றில்லையா…
என்ன செய்குவேன்…
உந்தன் மூச்சு பிச்சையிலே…
நான்தான் வாழ்வேன்…

பெண் : வீட்டை விட்டு வெளியேற…
ஆணைகள் இட்டால் என் செய்வாய்…
குழு : யே யே யே யே…

ஆண் : இருப்பவர்க்கே மனை சொந்தம்…
என்று ஒரு சட்டம் நான் இடுவேன்…

பெண் : இடம் ஒன்று கொடுத்தால்…
மடம் ஒன்று பிடிக்கும்…
கள்ளக் கண்ணாளன் நீ என்று கண்டேன்…
தரவே தர மாட்டேன்…

ஆண் : இடம் தருவாயா மனசுக்குள்ளே…
குழு : யே யே யே யே…
ஆண் : இடம் தருவாயா மனசுக்குள்ளே…
குழு : யே யே யே யே…

பெண் : தரமாட்டேன் தரமாட்டேன்…
இடம் தரமாட்டேன்…
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்…

ஆண் : பகலில் உன் வீட்டில் காவலன் ஆவேன்…
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்…
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே…

BGM

ஆண் : இதயம் என்னும் மாளிகையில்…
நூறு வாசலே…
எந்த வழி போவது என்று கேட்கின்றேன்…

BGM

பெண் : கண்கள் என்னும் வாசல் வழி…
புகுந்த கள்வனே…
நுழைந்து கொள்ள வாசல் வழியா கேட்கின்றாய்…

ஆண் : வீட்டுக்குள்ளே நுழைந்திருக்கும்…
கள்வனைக் காட்டிக் கொடுப்பாயா…
குழு : யே யே யே யே…

பெண் : கண் கதவை சாத்திக்கொள்வேன்…
காலம் முழுதும் இருப்பாயா…

ஆண் : இதயம் போலொரு அழகிய வீடு…
எங்கு சென்றாலும் அடைவது ஏது…
எனக்கிடம் தருவாயா அன்பே…

பெண் : இடம் ஒன்று தந்தேன்…
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே…
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே…

ஆண் : தந்தாயே தந்தாயே தந்தாயே…
இதய வீட்டின் அத்தனை அறைகளும் தந்தாயே…

பெண் : அரண்மணை கதவுகள் மொத்தமும் அடைத்தேன்…
எல்லா ஜன்னலும் சாத்தி முடித்தேன்…
தப்பிக்க முடியாது அன்பே…

BGM


Notes : Idam Tharuvaya Manasukkulle Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. இடம் தருவாயா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top