பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | சச்சின் வாரியர் | சச்சின் வாரியர் | மறக்குமா நெஞ்சம் |
Netrum Indrum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நேற்றும் இன்றும் இருதினம்…
ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்…
அரும்பு மலர அரைக்கணம்…
அது மலர்ந்தது எந்தன் புது முகம்…
ஆண் : தே மாதுளை இதழ்களால்…
தேன் வார்த்தை உதிக்கிறாள்…
நான் பார்த்தை பார்த்துமே…
பாராததாய் நடிக்கிறாள்…
ஆண் : இந்த நாடக அரங்கில்…
நாட்கள் நகருதே…
இந்தக் காவியக் கதையில்…
காய்ச்சல் கனலுதே…
ஆண் : ஹேய்… காற்றும் இவளே…
ஹேய்… தோள் சிறகும் இவளே…
ஹேய்… என் வானம் முகில்…
மழை அனைத்துமே இவள்…
ஆண் : நேற்றும் இன்றும் இருதினம்…
ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்…
அரும்பு மலர அரைக்கணம்…
அது மலர்ந்தது எந்தன் புது முகம்…
—BGM—
ஆண் : பேச வேண்டி வருவேனே ஓடி…
உனை பார்த்ததும் மறந்து போகும் சேதி…
ஆண் : ஒத்திகைகள் பல வீட்டில் செய்தும்…
அவை போதவில்லை அதுதானே மீதி…
புரியாத பல கேள்வி வந்தும்…
திரியாத வரம் வேண்டிக் கொள்வேன்…
ஆண் : அறியாத வயதென்று சொல்வாய்…
அதை நான் எழுதி தாண்டிச் செல்வேன்…
இது சூரியகாந்தி பூவின் இதயமே…
நீ போகிற திசையில் தானே திரும்புமே…
ஆண் : ஹேய்… காற்றும் இவளே…
ஹேய்… தோள் சிறகும் இவளே…
ஹேய்… என் வானம் முகில்…
மழை அனைத்துமே இவள்…
—BGM—
ஆண் : தூக்கம் வந்து இரு கண்ணை சுழட்டும்…
உன் பிம்பம் வந்து இடை நின்று கெடுக்கும்…
புத்தகங்கள் பல பாடல் உரைக்கும்…
அது மீண்டும் மீண்டும் இவள் பெயரே உதிக்கும்…
ஆண் : பலர் சூழ வரும் கூட்டம் என்றால்…
உனை மட்டும் தனியாக பார்ப்பேன்…
பலர் கூச்சல் இடுகின்ற போது…
குரலாக உனை மட்டும் கேட்பேன்…
ஆண் : தினம் பேசிட வேண்டும்…
பெண்ணே அனுமதி…
உனை பார்த்திடும் நொடிகள்…
எல்லாம் வெகுமதி…
ஆண் : ஹேய்… காற்றும் இவளே…
ஹேய்… தோள் சிறகும் இவளே…
ஹேய்… என் வானம் முகில்…
மழை அனைத்துமே இவள்…
ஆண் : நேற்றும் இன்றும் இருதினம்…
ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்…
Notes : Netrum Indrum Song Lyrics in Tamil. This Song from Marakkuma Nenjam (2023). Song Lyrics penned by Thamarai. நேற்றும் இன்றும் பாடல் வரிகள்.