பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஏ.ஆர்.ரகுமான் & சக்திஸ்ரீ கோபாலன் | ஏ. ஆர். ரகுமான் | கடல் |
Nenjukkule Umma mudinjirukken Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நெஞ்சுக்குள்ள…
உம்ம முடிஞ்சிருக்கேன்…
பெண் : நெஞ்சுக்குள்ள… உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி…
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி…
பெண் : வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம்…
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்…
பெண் : நீர் போன பின்னும் நிழல் மட்டும்…
போகலயே போகலயே…
நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு…
பெண் : அப்ப நிமிந்தவதான் அப்பறமா…
குனியலையே குனியலையே…
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே…
பெண் : நெஞ்சுக்குள்ள…
உம்ம முடிஞ்சிருக்கேன்…
பெண் : நெஞ்சுக்குள்ள… உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…
—BGM—
பெண் : பச்சி ஒறங்கிருச்சு…
பால் தயிரா தூங்கிருச்சு…
இச்சி மரத்து மேல எல கூட தூங்கிருச்சு… ஏ… ஏ…
பெண் : காச நோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில…
ஆச நோய் வந்தமக அரைநிமிசம் தூங்கலையே… ஏ… ஏ…
பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…
—BGM—
பெண் : ஒரு வாய் எறங்கலையே…
உள் நாக்கு நனையலையே…
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே…
பெண் : ஏலே இளஞ்சிறுக்கி ஏதோ சொல்ல முடியலையே…
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே… ஓ…
பெண் : ஓ… நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி…
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி…
பெண் : வண்ண மணியாரம்…
வலதுகை கெடியாரம்…
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்…
பெண் : நீர் போன பின்னும் நிழல் மட்டும்…
போகலயே போகலயே…
நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு…
பெண் : அப்ப நிமிந்தவதான் அப்பறமா…
குனியலையே குனியலையே…
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே…
பெண் : நெஞ்சுக்குள்ள…
உம்ம முடிஞ்சிருக்கேன்…
—BGM—
பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…
—BGM—
Notes : Nenjukkule Umma mudinjirukken Song Lyrics in Tamil. This Song from Kadal (2013). Song Lyrics penned by Vairamuthu. நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் பாடல் வரிகள்.