பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & ஷேக் முகமது | தேவா | கிழக்கு கரை |
Nandhavanam Indhamanam Song Lyrics in Tamil
ஆண் : நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
அன்று முதல் இன்று வரை உள்ளதை புரிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
ஆண் : இதை மகனே நீ அறிந்தால்…
எனக்கு இங்கு அதுவே போதுமடா…
சில தவறை நான் புரிந்தால்…
எதற்கு என்று வரும் நாள் கோருமடா…
ஆண் : இதை கண்ணா உனக்கெடுத்து சொன்னால்…
புரிந்து கொள்ளும் பருவங்கள் வரவில்லையே என் மகனே…
ஆண் : நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
அன்று முதல் இன்று வரை உள்ளதை புரிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
—BGM—
ஆண் : ஆகாயம் நிலமும்கூட அப்பப்பா வெப்பமாச்சு…
கார்கால ஊத காற்று கத்திரி வெயில் ஆச்சு…
கண்ணீர நான் தொடச்சு கை எழுத்து அழிஞ்சிடலாம்…
தண்ணீரா ஊத்தினாலும் தலை எழுத்து அழிஞ்சிடுமா…
—BGM—
ஆண் : என்ன பெத்த தாய்க்குக்கூட…
என் பேர் சொல்ல வெக்கம்தான்…
என்ன செய்ய பாதை மாறி…
பிள்ளை சென்ற துக்கம்தான்…
இருப்பினும் என்றும் இவன் மனம்…
அந்த தாயின் பக்கம்தான்…
ஆண் : அன்னை சொல்லும் வார்த்தையை மீறி…
எப்போதும் நான் செல்லாதவன்…
என்ன சொல்ல காலத்தின் கொடுமை…
இப்போது நான் பொல்லாதவன்…
அட உனக்கும் ஒரு நாள்…
நான் படும் பாடு என்னென்று புரியுமடா…
ஆண் : நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
அன்று முதல் இன்று வரை உள்ளதை புரிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
—BGM—
ஆண் : செல்வங்களும் வீடும் வாழ்வும்…
வந்தாலென்ன என்னோடு…
எப்போதும் என் கால்கள் செல்லும்…
நியாயங்களின் பின்னோடு…
எனகென இங்க இருப்பது ஒரு கொள்கை கோட்பாடு…
ஆண் : என்னோடுதான் நிழலென வந்தால்…
கண்ணே உந்தன் தாய்தானடா…
பொன்னே எங்கள் வீரத்தை நீயும்…
கொண்டாடிடும் சேய்தானடா…
அட சுகமோ துயரோ வருவது வரட்டும்…
ஒன்றாக இணைந்திருப்போம்…
ஆண் : நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
அன்று முதல் இன்று வரை உள்ளதை புரிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
ஆண் : இதை மகனே நீ அறிந்தால்…
எனக்கு இங்கு அதுவே போதுமடா…
சில தவறை நான் புரிந்தால்…
எதற்கு என்று வரும் நாள் கோருமடா…
ஆண் : இதை கண்ணா உனக்கேடுத்து சொன்னால்…
புரிந்து கொள்ளும் பருவங்கள் வரவில்லையே என் மகனே…
ஆண் : நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
அன்று முதல் இன்று வரை உள்ளதை புரிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
—BGM—
Notes : Nandhavanam Indhamanam Song Lyrics in Tamil. This Song from Kizhakku Karai (1991). Song Lyrics penned by Vaali. நந்தவனம் இந்தமனம் பாடல் வரிகள்.