nanbane-song-lyrics-mankatha

நண்பனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலியுவன் ஷங்கர் ராஜா & மதுஸ்ரீ யுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Nanbane Song Lyrics in Tamil


BGM

பெண் : என் நண்பனே என்னை எய்த்தாய்… ஓ…
என் பாவமாய் வந்து வாய்த்தாய்…
உன் போலவே நல்ல நடிகன்… ஓ…
ஊா் எங்கிலும் இல்லை ஒருவன்…

பெண் : நல்லவர்கள் யாரோ… தீயவர்கள் யாரோ…
கண்டு கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே…
கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று…
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ…

ஆண் : காதல் என்பது கனவு மாளிகை…
புரிந்து கொள்ளடி என் தோழியே…
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்…
காணவில்லையே என் தோழியே…

BGM

பெண் : வலக்கையை பிடித்து வலக்கையில் விழுந்தேன்…
வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்…
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்…

பெண் : எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல்…
முழுவதும் பிழை…
விழிகளின் வழி விழுந்தது மழை…
எல்லாம் உன்னால்தான்…

பெண் : இதுவா உந்தன் நியாயங்கள்…
எனக்கேன் இந்த காயங்கள்…
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்… ஓஓ…

பெண் : முருகன் முகம் ஆறுதான்…
மனிதன் முகம் நூறுதான்…
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ…
என் நண்பனே என்னை எய்த்தாய்…

ஆண் : காதல் வெல்லுமா காதல் தோற்குமா…
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே…
காதல் ஓவியம் கிழிந்துபோனதா…
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்…

BGM

பெண் : அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்…
அன்பென்னும் விளக்கை அணைத்தது அறியேன்…

பெண் : புயல் வந்து சாய்த்த மரம் ஒரு விறகு…
உனக்கென தெரியும்…
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி…
இள மனம் எங்கும் இருந்தது வலி…
எம்மா எம்மா…

பெண் : உலகில் உள்ள பெண்களே…
உரைப்பேன் ஒரு பொன்மொழி…
காதல் ஒரு கனவு மாளிகை… ஓஓ…

பெண் : எதுவும் அங்கு மாயம்தான்…
எல்லாம் வர்ணஜாலம்தான்…
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே…

ஆண் : காதல் என்பது கனவு மாளிகை…
புரிந்து கொள்ளடி என் தோழியே…
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்…
காணவில்லையே என் தோழியே…

BGM


Notes : Nanbane Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Vaali. நண்பனே பாடல் வரிகள்.