| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| எஸ்.கே.ராஜாமணி | கே. வீரமணி | சோமு & கஜா | ஐயப்பன் பாடல்கள் |
Nalmuthu Maniyodu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நல்முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை…
நவரத்ன ஒளியோடு சுடர்விடும் மாலை…
கற்பூர ஜோதியில் கலந்திடும் மாலை…
கனகமணி கண்டனின் துளசி மாலை…
—BGM—
ஆண் : ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை…
அய்யனின் கடைக்கண்ணில் அன்பெனும் மாலை…
அழுதையில் குளித்திடும் அழகுமணி மாலை…
பம்பையில் பாலனின் பவளமணி மாலை…
—BGM—
ஆண் : ஐந்து மலைவாசனின் அழகுமணி மாலை…
ஐயப்ப சுவாமியின் அருள் கொஞ்சும் மாலை…
ஆனந்த ரூபனின் அன்பென்னும் மாலை…
கன்னியின் கழுத்தினில் அரங்கேறும் மாலை…
—BGM—
ஆண் : முத்தோடும் மணியோடும் முழங்கிடும் மாலை…
முக்கண்ணன் மகனான மணிகண்டன் மாலை…
கழுத்தோடு உறவாடும் காந்தமலை மாலை…
காணவரும் பக்தர்க்கு காட்சிதரும் மாலை…
ஆண் : நல்முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை…
நவரத்ன ஒளியோடு சுடர்விடும் மாலை…
கற்பூர ஜோதியில் கலந்திடும் மாலை…
கனகமணி கண்டனின் துளசி மாலை…
துளசி மாலை… துளசி மாலை…
—BGM—
Notes : Nalmuthu Maniyodu Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by S. K. Rajamani. நல்முத்து மணியோடு பாடல் வரிகள்.

