பொன்னெடுத்து வாரேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாசாமி போட்ட முடிச்சு

Ponneduthu Vaaren Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…
என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…

ஆண் : சொந்தம் இருக்கு…
பெண் : ஆஆ…
ஆண் : சொர்க்கம் இருக்கு…
பெண் : ஆஆ…
ஆண் : இன்பம் நமக்கு…
ஆண் & பெண் : ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…

பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…

BGM

பெண் : சொன்னால் ஒரு ஆனந்தம்…
உன்னால் வரும் பேரின்பம்…
சொல்லிச் சொல்லி தீராது…
சொக்க வச்ச மாமன் சொந்தம்…

ஆண் : தொட்டு வரும் பூங்காற்று…
சொல்லித் தரும் தேன் பாட்டு…
நித்தம் நித்தம் நான் கேட்டு…
கிட்ட வந்தேன் ஆசப் பட்டு…

பெண் : சிந்தாமணி சேல மூடி…
சிந்தும் புதுப் பாட்டு தான்…
செந்தாமரப் பூவப் போல…
சின்னப் பொண்ணுதான்…

ஆண் : கண்ணாடி போல் மேனி மீது…
என்னை தினம் பார்க்கவா…
உன்னால் சுகம் கூடும் போது…
சொர்க்கம் அல்லவா…

பெண் : போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும்… ம்ம் ம்ம்…

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…

பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…

ஆண் : சொந்தம் இருக்கு…
பெண் : ஆஆ…
ஆண் : சொர்க்கம் இருக்கு…
பெண் : ஆஆ…
ஆண் : இன்பம் நமக்கு…
ஆண் & பெண் : ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…

பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…

BGM

பெண் : எத்தனையோ நாளாக…
என் உடம்பு நூலாக…
மெத்தையிலே மேலாக…
தத்தளிச்சேன் மேனி நோக…

ஆண் : கொட்டும் மழை ஊற்றாக…
கோடை குளிர் காற்றாக…
புத்தம் புது பாட்டாக…
பொங்குதடி போகப் போக…

பெண் : உச்சி முதல் பாதம் தோறும்…
உஷ்ணம் வந்து ஏறுது…
உங்க முகம் பாத்த போது வெக்கம் வருது…

ஆண் : செங்கரும்பு சாறு போல உள்ளுக்குள்ள ஊறுது…
கங்கை நதி வைகையோடு கட்டிக் கொள்ளுது…

பெண் : போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும்… ம்ம் ம்ம்…

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…

பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…

ஆண் : சொந்தம் இருக்கு…
பெண் : ஆஆ… சொர்க்கம் இருக்கு…
ஆண் : ஓஓ… இன்பம் நமக்கு…
ஆண் & பெண் : ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…

ஆண் & பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…


Notes : Ponneduthu Vaaren Song Lyrics in Tamil. This Song from Saami Potta Mudichu (1991). Song Lyrics penned by Gangai Amaran. பொன்னெடுத்து வாரேன் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top