பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மனோ & கே.எஸ். சித்ரா | இளையராஜா | சாமி போட்ட முடிச்சு |
Ponneduthu Vaaren Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…
என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…
ஆண் : சொந்தம் இருக்கு…
பெண் : ஆஆ…
ஆண் : சொர்க்கம் இருக்கு…
பெண் : ஆஆ…
ஆண் : இன்பம் நமக்கு…
ஆண் & பெண் : ஆஆ… ஆஆ… ஆஆ…
ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…
பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…
—BGM—
பெண் : சொன்னால் ஒரு ஆனந்தம்…
உன்னால் வரும் பேரின்பம்…
சொல்லிச் சொல்லி தீராது…
சொக்க வச்ச மாமன் சொந்தம்…
ஆண் : தொட்டு வரும் பூங்காற்று…
சொல்லித் தரும் தேன் பாட்டு…
நித்தம் நித்தம் நான் கேட்டு…
கிட்ட வந்தேன் ஆசப் பட்டு…
பெண் : சிந்தாமணி சேல மூடி…
சிந்தும் புதுப் பாட்டு தான்…
செந்தாமரப் பூவப் போல…
சின்னப் பொண்ணுதான்…
ஆண் : கண்ணாடி போல் மேனி மீது…
என்னை தினம் பார்க்கவா…
உன்னால் சுகம் கூடும் போது…
சொர்க்கம் அல்லவா…
பெண் : போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும்… ம்ம் ம்ம்…
ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…
பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…
ஆண் : சொந்தம் இருக்கு…
பெண் : ஆஆ…
ஆண் : சொர்க்கம் இருக்கு…
பெண் : ஆஆ…
ஆண் : இன்பம் நமக்கு…
ஆண் & பெண் : ஆஆ… ஆஆ… ஆஆ…
ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…
பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…
—BGM—
பெண் : எத்தனையோ நாளாக…
என் உடம்பு நூலாக…
மெத்தையிலே மேலாக…
தத்தளிச்சேன் மேனி நோக…
ஆண் : கொட்டும் மழை ஊற்றாக…
கோடை குளிர் காற்றாக…
புத்தம் புது பாட்டாக…
பொங்குதடி போகப் போக…
பெண் : உச்சி முதல் பாதம் தோறும்…
உஷ்ணம் வந்து ஏறுது…
உங்க முகம் பாத்த போது வெக்கம் வருது…
ஆண் : செங்கரும்பு சாறு போல உள்ளுக்குள்ள ஊறுது…
கங்கை நதி வைகையோடு கட்டிக் கொள்ளுது…
பெண் : போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும்… ம்ம் ம்ம்…
ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…
பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…
ஆண் : சொந்தம் இருக்கு…
பெண் : ஆஆ… சொர்க்கம் இருக்கு…
ஆண் : ஓஓ… இன்பம் நமக்கு…
ஆண் & பெண் : ஆஆ… ஆஆ… ஆஆ…
ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…
ஆண் & பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…
Notes : Ponneduthu Vaaren Song Lyrics in Tamil. This Song from Saami Potta Mudichu (1991). Song Lyrics penned by Gangai Amaran. பொன்னெடுத்து வாரேன் பாடல் வரிகள்.