மாதுளங்கனியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & எஸ்.ஜானகிஇளையராஜாசாமி போட்ட முடிச்சு

Madhulanganiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
மரகத மணியே என் மயில் இள மயிலே…
மாறன் கணை போடும் விழியே…
மாலை தன்னில் பாடும் மொழியே…
மாறன் கணை போடும் விழியே…
மாலை தன்னில் பாடும் மொழியே…

ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
மரகத மணியே என் மயில் இள மயிலே…

ஆண் : தங்க மலர் பாதம் மேவி…
தாளம் போடும் கொலுசு போல…
அங்கும் இங்கும் ஆடிப் பார்க்கும் ஆசை எனக்கு…

பெண் : ஓ… செங்கமலம் போல…
தேவி தேரில் ஏறி உன்னைக் கூட…
இங்கு வந்த நேரம் என்ன காதல் வழக்கு…

ஆண் : அள்ளி அள்ளி கூடும் போது ஆசை வளர…
அங்கம் எங்கும் காதல் என்ற பூவும் மலர…

பெண் : கிள்ளிக் கிள்ளி வாசம் பார்க்க மோகம் தொடர…
சொல்லிச் சொல்லி காம தேவன் பாணம் படர…

ஆண் : என்னை தினம் பாடும் குயிலே…
வண்ணம் கொண்டு ஆடும் மயிலே…

ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
பெண் : ஓஓ…

ஆண் : மரகத மணியே என் மயில் இள மயிலே…
பெண் : ஆஆ…

BGM

ஆண் : உச்சி முதல் பாதம் தோறும்…
நேரில் காண போதை ஏறும்…
கொஞ்சிக் கொஞ்சி கூட வேண்டும் காலம் தோறும்…

பெண் : ஓ… வெற்றிக் கொடி ஏற்றி ஏற்றி…
வேகமோடு தேரை ஓட்டி…
சுற்றி வந்த ராஜராஜன் உன் தாழ் போற்றி…

ஆண் : முற்றுகையை போட்ட போது மோகம் விடுமோ…
முன் இருக்கும் மோக வாசல் தாகம் விடுமோ…

பெண் : கற்பனைக்கும் வேலி போட வேண்டும் தலைவா…
காதலிக்கு நாணம் மேலும் கூடும் அல்லவா…

ஆண் : மோகம் இசை பாடும் உடலே…
காமன் விளையாடும் திடலே…

ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
பெண் : ஓ…

ஆண் : மரகத மணியே என் மயில் இள மயிலே…

பெண் : மாறன் கணை போடும் விழியே…
மாலை தன்னில் பாடும் மொழியே…
மாறன் கணை போடும் விழியே…
மாலை தன்னில் பாடும் மொழியே…

ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
பெண் : ஓஓ…
ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…


Notes : Madhulanganiye Song Lyrics in Tamil. This Song from Saami Potta Mudichu (1991). Song Lyrics penned by Gangai Amaran. மாதுளங்கனியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading