பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பார்வதி | நகுல் & ஆண்ட்ரியா ஜெரெமையா | எஸ்.எஸ்.தமன் | வல்லினம் |
Nakula Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை…
வலை விரித்திடு இள மனம் இரை…
சரியா இது நடு நரம்பிலும்…
பட்டுத் தெறிப்பது சரிதான் விடு…
பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை…
வலை விரித்திடு…
பெண் : இரவும் பகலா துளியும் கடலா…
மணல் மணலா மணலா புனலா…
உயிரா உடலா அசலா நகலா…
எதில் எதில் நீ நகுலா…
பெண் : செதிலின் செதிலா அதிலும் அதிலா…
மெது மெதுவா அடிக்கும் புயலா…
அதிலா இதிலா எதிலும் முதலா…
தெரிவதெல்லாம் நகுலா…
ஆண் : கைப் பிடி அளவா கைக் கிள்ளை ஆடவா…
எப்படி மறுப்பேன் எனக்கென்ன அடமா…
உன் இடை வலமா என் விரல் பலமா…
நெஞ்சுக்குள் கொதித்தால் அதன் பேர் ஜுரமா…
ஆண் : கண்களை விடவா கல் என்ன வலுவா…
கேள்விக்கு பதில் உன் உறக்கத்தில் தரவா…
உள்ளங்கை தொடவா உன்மத்தம் நடவா…
உன் முத்தம் பதிந்தால் அதை பதைந்திடவா…
பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை…
வலை விரித்திடு இள மனம் இரை…
சரியா இது நடு நரம்பிலும்…
—BGM—
பெண் : ஓ… எது வரை பந்தாடும் எண்ணம்…
தாயம் போல உருட்டிய பின்னும்…
பல முறை அம்மாலையாகி…
நானும் ஆட்டம் பழகிடணும்…
பெண் : ஒரு சொல் போதுமே என்னை முடக்க…
பத்துப் பக்கம் தந்தால் எதை படிக்க…
இன்னும் இன்னும் இன்னும் வழி இருக்கா…
உயிர் எடுக்க…
குழு : மின்னுங்கள் நிறமா வெயிலின் குணமா…
உன் முடி பறக்கும் தறிக்கெட்டுத் தனமா…
நீந்திட வருமா தத்தளிக்கணுமா…
உன் விழிக் குளத்தில் கரை பிடிபடுமா…
குழு : தீக் குச்சித் திரளா முட்டிடும் தனலா…
உன் முகம் ஜொலிக்கும் தகத் தகப் பொருளா…
கொஞ்சம் நீ அனலா மாறிடு நகுலா…
இப்படி விரட்டும் கபடிக்கு பதிலா…
—BGM—
Notes : Nakula Song Lyrics in Tamil. This Song from Vallinam (2014). Song Lyrics penned by Parvathy. நகுலா பாடல் வரிகள்.