| பாடலாசிரியர்கள் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | விஜய் பிரகாஷ் & சின்மயி | ஏ. ஆர். ரகுமான் | மரியான் |
Naetru Aval Irundhal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நேற்று அவள் இருந்தாள்…
அவளோடு நானும் இருந்தேன்…
பெண் : ஹேய்… மரியான் வா…
ஆண் : நேற்று அவள் இருந்தாள்…
அவளோடு நானும் இருந்தேன்…
பெண் : இருந்தேன்…
ஆண் : நேற்று அவள் இருந்தாள்…
அவளோடு நானும் இருந்தேன்…
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்…
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன…
பெண் : ஹா… ஆஅ…
ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது…
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது…
ஆண் : நேற்று அவள் இருந்தாள்…
அவளோடு நானும் இருந்தேன்…
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்…
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன…
ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது…
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது…
—BGM—
பெண் : ஹா ஆஆ… நேற்று எந்தன் மூச்சினில்…
உன் காதல் அல்லால் காற்று இல்லையே…
நேற்று எந்தன் மூச்சினில்…
உன் காதல் அல்லால் காற்று இல்லையே…
ஆண் : நேற்று எந்தன் ஏட்டில்…
சோகம் என்னும் சொல் இல்லை இல்லை…
பெண் : நேற்று எந்தன் கை வளையல்…
இசைத்ததெல்லாம் உன் இசையே…
ஆண் : வானே நீ இன்று…
அந்த நேற்றுவரை கொண்டு வா…
பெண் : நேற்று நீ இருந்தாய்…
உன்னோடு நானும் இருந்தேன்…
ஆண் : இருந்தாய்… இருந்தோம்…
பெண் : நேற்று நீ இருந்தாய்…
உன்னோடு நானும் இருந்தேன்…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : ஆகாயத்தில் நூறு நிலாக்களும்…
ஆண் & பெண் : அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன…
பெண் : அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது…
கரை வந்த அலை அங்கே ஏங்கி நின்றது…
ஆண் : நேற்று அவள் இருந்தாள்…
அவளோடு நானும் இருந்தேன்…
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்…
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன…
ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது…
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது…
Notes : Naetru Aval Irundhal Song Lyrics in Tamil. This Song from Maryan (2013). Song Lyrics penned by Vaali. நேற்று அவள் இருந்தாள் பாடல் வரிகள்.


