பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காளிதாசன் | தேவா | தேவா | நட்புக்காக |
Meesakaara Nanba Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா…
மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா…
ரோஷம் அதிகம்டா…
அத விட பாசம் அதிகம்டா…
ஆண் : நம்ம பழகினத மறக்கலயே…
அந்த பருவம் இப்போ கிடைக்கலையே…
அந்த காட்சிகளுக்கு நரையில்லயே…
இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே…
ஆண் : மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா… டேய்…
—BGM—
ஆண் : அந்த ஆத்தங்கரைய கேட்டு பாரு…
மீன் புடிச்ச கத அது சொல்லும்…
அந்த பண்ண மேட்ட கேட்டு பாரு…
பால் கறந்த கத அது சொல்லும்… ஓய்…
ஆண் : அந்த சோள காட்ட கேட்டு பாரு…
கொடி புடிச்ச கத அது சொல்லும்…
அந்த டூரின் டாக்ஸிச கேட்டு பாரு…
படம் பார்த்த கத அது சொல்லும்…
ஆண் : கர்ணம் போட்டு கிணத்துல குதிச்ச…
நினைவுகள் மலருது…
மனசுக்குள் குளிருது…
ஆண் : கம்பங்கூழு குடிச்சிடத்தானே…
உதடுகள் துடிக்குது…
மீசையும் தடுக்குது…
ஆண் : பழகினத மறக்கலயே…
அந்த பருவம் இப்போ கிடைக்கலையே…
அந்த காட்சிகளுக்கு நரையில்லயே…
இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே…
ஆண் : மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா…
டேய் டேய் டேய்…
—BGM—
ஆண் : பெத்த அப்பன போலே அக்கறை வச்சி…
செஞ்ச சேவைக்கெல்லாம் விலையில்லயே…
அந்த அன்பு நெறைஞ்ச புள்ள பாசம்…
அட உன்ன போலதான் எனக்கில்லையே…
ஆண் : இந்த விதி முழுக்க தோரணம் கட்டி…
கண்ணு முழிச்சதெல்லாம் எதுக்காக…
நான் பெத்த பொண்ணுதான் வாழ வேண்டி…
நீ உழைச்சதெல்லாம் எனக்காக…
ஆண் : கர்ணன் போலே கடமைய மதிச்சு…
தினம் தினம் உழைச்சவன் வேர்வைய வடிச்சவன்…
பாட்டுக்காரன் பாரதி சொன்ன…
கண்ணண போலவே எனக்கிங்கு பொறந்தவன்…
ஆண் : கண்ணு ரெண்டுதான் கலங்குதய்யா…
என்ன புண்ணியம் செஞ்சேன் உன்னை அடைய…
நன்றி கடன் தீர்க்க என்ன கொடுப்பேன்…
உன் வேலைக்காரனாக வந்து பொறப்பேன்…
ஆண் : மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா… டேய்…
மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா…
ரோஷம் அதிகம்டா…
அத விட பாசம் அதிகம்டா…
ஆண் : நம்ம பழகினத மறக்கலயே…
அந்த பருவம் இப்போ கிடைக்கலையே…
அந்த காட்சிகளுக்கு நரையில்லயே…
இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே…
ஆண் : மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா…
Notes : Meesakaara Nanba Song Lyrics in Tamil. This Song from Natpukkaga (1998). Song Lyrics penned by Kalidasan. மீசக்கார நண்பா பாடல் வரிகள்.