மீசக்கார நண்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்தேவாதேவாநட்புக்காக

Meesakaara Nanba Song Lyrics in Tamil


BGM

ஆண் : மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா…
மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா…
ரோஷம் அதிகம்டா…
அத விட பாசம் அதிகம்டா…

ஆண் : நம்ம பழகினத மறக்கலயே…
அந்த பருவம் இப்போ கிடைக்கலையே…
அந்த காட்சிகளுக்கு நரையில்லயே…
இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே…

ஆண் : மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா… டேய்…

BGM

ஆண் : அந்த ஆத்தங்கரைய கேட்டு பாரு…
மீன் புடிச்ச கத அது சொல்லும்…
அந்த பண்ண மேட்ட கேட்டு பாரு…
பால் கறந்த கத அது சொல்லும்… ஓய்…

ஆண் : அந்த சோள காட்ட கேட்டு பாரு…
கொடி புடிச்ச கத அது சொல்லும்…
அந்த டூரின் டாக்ஸிச கேட்டு பாரு…
படம் பார்த்த கத அது சொல்லும்…

ஆண் : கர்ணம் போட்டு கிணத்துல குதிச்ச…
நினைவுகள் மலருது…
மனசுக்குள் குளிருது…

ஆண் : கம்பங்கூழு குடிச்சிடத்தானே…
உதடுகள் துடிக்குது…
மீசையும் தடுக்குது…

ஆண் : பழகினத மறக்கலயே…
அந்த பருவம் இப்போ கிடைக்கலையே…
அந்த காட்சிகளுக்கு நரையில்லயே…
இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே…

ஆண் : மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா…
டேய் டேய் டேய்…

BGM

ஆண் : பெத்த அப்பன போலே அக்கறை வச்சி…
செஞ்ச சேவைக்கெல்லாம் விலையில்லயே…
அந்த அன்பு நெறைஞ்ச புள்ள பாசம்…
அட உன்ன போலதான் எனக்கில்லையே…

ஆண் : இந்த விதி முழுக்க தோரணம் கட்டி…
கண்ணு முழிச்சதெல்லாம் எதுக்காக…
நான் பெத்த பொண்ணுதான் வாழ வேண்டி…
நீ உழைச்சதெல்லாம் எனக்காக…

ஆண் : கர்ணன் போலே கடமைய மதிச்சு…
தினம் தினம் உழைச்சவன் வேர்வைய வடிச்சவன்…
பாட்டுக்காரன் பாரதி சொன்ன…
கண்ணண போலவே எனக்கிங்கு பொறந்தவன்…

ஆண் : கண்ணு ரெண்டுதான் கலங்குதய்யா…
என்ன புண்ணியம் செஞ்சேன் உன்னை அடைய…
நன்றி கடன் தீர்க்க என்ன கொடுப்பேன்…
உன் வேலைக்காரனாக வந்து பொறப்பேன்…

ஆண் : மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா… டேய்…
மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா…
ரோஷம் அதிகம்டா…
அத விட பாசம் அதிகம்டா…

ஆண் : நம்ம பழகினத மறக்கலயே…
அந்த பருவம் இப்போ கிடைக்கலையே…
அந்த காட்சிகளுக்கு நரையில்லயே…
இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே…

ஆண் : மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா…


Notes : Meesakaara Nanba Song Lyrics in Tamil. This Song from Natpukkaga (1998). Song Lyrics penned by Kalidasan. மீசக்கார நண்பா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top