| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | ஷோபா ஷங்கர் | ஏ.ஆர்.ரகுமான் | மே மாதம் |
Margazhi Poove Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…
பெண் : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…
பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…
—BGM—
பெண் : பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்…
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்…
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்…
நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்…
பெண் : வாழ்க்கையின் ஒரு பாதி…
நான் என்று வசிப்பேன்…
வாழ்க்கையின் மறு பாதி…
நான் என்று ரசிப்பேன்…
காற்றில் வரும் மேகம் போலே…
நான் என்றும் மிதப்பேன்…
பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…
{ குழு : வெண்பா பாடி வரும் வண்டுக்கு…
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்…
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு…
சந்தம் தந்து விடும் மைனாக்கள்… } * (2)
—BGM—
பெண் : காவேரி மணலில் நடந்ததுமில்லை…
கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை…
சுதந்திர வானில் பறந்ததுமில்லை…
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை…
பெண் : சாலையில் நானாகப் போனதுமில்லை…
சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை…
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை…
குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
பெண் : உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…
குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…
குழு : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…
குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…
{ குழு : வெண்பா பாடி வரும் வண்டுக்கு…
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்…
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு…
சந்தம் தந்து விடும் மைனாக்கள் } * (4)
—BGM—
Notes : Margazhi Poove Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. மார்கழிப் பூவே பாடல் வரிகள்.


