பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.என். சுரேந்தர் & சுவர்ணலதா | தேவா | செந்தூரபாண்டி |
Mane Nane Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மானே நானே சரணம் சரணம்…
மடியின் மேலே…
மனதில் ஏதோ சலனம் சலனம்…
மழை வந்தாலே…
ஆண் : மானே நானே சரணம் சரணம்…
மடியின் மேலே…
மனதில் ஏதோ சலனம் சலனம்…
மழை வந்தாலே…
பெண் : ஊர் தூங்கும் ராத்திரி நேரம்…
இளமனதில் எத்தனை தாபம்…
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்…
இளமனதில் எத்தனை தாபம்…
ஆண் : நீராடு இளமையிலே…
சேவல் கூவும் வரையினிலே…
பெண் : மானே நானே சரணம் சரணம்…
மடியின் மேலே…
மனதில் ஏதோ சலனம் சலனம்…
மழை வந்தாலே…
—BGM—
ஆண் : ஆடை நனைந்திருக்க ஆசை தீயை மூட்டாதா…
ஆத்தாடி காளை கன்று வாலை மெல்ல ஆட்டாதா…
பெண் : தேகம் தழுவி ஒரு யாகம் செய்ய கூடாதா…
காதோட கன்னிப்பூவும் காதல் கீதம் ஆகாதா…
ஆண் : மின்சார மின்னல் ஒன்று…
மெல்ல மெல்ல பாய…
பெண் : மீட்டாத வீணை உந்தன்…
மார்பின் மீது சாய…
ஆண் : புது ராகம் நரம்புகளில்…
உருவாகும் நொடிப்பொழுதில்…
பெண் : மானே நானே சரணம் சரணம்…
மடியின் மேலே…
ஆண் : மனதில் ஏதோ சலனம் சலனம்…
மழை வந்தாலே…
—BGM—
ஆண் : பாதக் கொலுசு கொஞ்சும் பாதம்…
என்ன பூச்செண்டா…
நான் தீண்டும் அங்கம் எல்லாம்…
தித்திக்கின்ற கற்கண்டா…
பெண் : பூவில் குடியிருக்க…
நீயும் என்ன பொன் வண்டா…
நான்தானே உன்னை என்னை…
சிந்திக்காத நாளுண்டா…
ஆண் : ஆகாயம் பொத்துக் கொண்டு…
தண்ணீர் விடும் போது…
பெண் : ஆகாய கங்கை செல்லும்…
கோட்டம் இங்கு ஏது…
ஆண் : ஒரு பாதி குளிர்ந்ததென்ன…
மறு பாதி கொதிப்பதென்ன…
பெண் : மானே நானே சரணம் சரணம்…
மடியின் மேலே…
மனதில் ஏதோ சலனம் சலனம்…
மழை வந்தாலே…
ஆண் : மானே நானே சரணம் சரணம்…
மடியின் மேலே…
மனதில் ஏதோ சலனம் சலனம்…
மழை வந்தாலே…
பெண் : ஊர் தூங்கும் ராத்திரி நேரம்…
இளமனதில் எத்தனை தாபம்…
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்…
இளமனதில் எத்தனை தாபம்…
ஆண் : நீராடு இளமையிலே…
சேவல் கூவும் வரையினிலே…
பெண் : மானே நானே சரணம் சரணம்…
மடியின் மேலே…
ஆண் : மனதில் ஏதோ சலனம் சலனம்…
மழை வந்தாலே…
Notes : Mane Nane Song Lyrics in Tamil. This Song from Sendhoorapandi (1993). Song Lyrics penned by Vaali. மானே நானே பாடல் வரிகள்.