மானே நானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.என். சுரேந்தர் & சுவர்ணலதாதேவாசெந்தூரபாண்டி

Mane Nane Song Lyrics in Tamil


BGM

ஆண் : மானே நானே சரணம் சரணம்…
மடியின் மேலே…
மனதில் ஏதோ சலனம் சலனம்…
மழை வந்தாலே…

ஆண் : மானே நானே சரணம் சரணம்…
மடியின் மேலே…
மனதில் ஏதோ சலனம் சலனம்…
மழை வந்தாலே…

பெண் : ஊர் தூங்கும் ராத்திரி நேரம்…
இளமனதில் எத்தனை தாபம்…
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்…
இளமனதில் எத்தனை தாபம்…

ஆண் : நீராடு இளமையிலே…
சேவல் கூவும் வரையினிலே…

பெண் : மானே நானே சரணம் சரணம்…
மடியின் மேலே…
மனதில் ஏதோ சலனம் சலனம்…
மழை வந்தாலே…

BGM

ஆண் : ஆடை நனைந்திருக்க ஆசை தீயை மூட்டாதா…
ஆத்தாடி காளை கன்று வாலை மெல்ல ஆட்டாதா…

பெண் : தேகம் தழுவி ஒரு யாகம் செய்ய கூடாதா…
காதோட கன்னிப்பூவும் காதல் கீதம் ஆகாதா…

ஆண் : மின்சார மின்னல் ஒன்று…
மெல்ல மெல்ல பாய…

பெண் : மீட்டாத வீணை உந்தன்…
மார்பின் மீது சாய…

ஆண் : புது ராகம் நரம்புகளில்…
உருவாகும் நொடிப்பொழுதில்…

பெண் : மானே நானே சரணம் சரணம்…
மடியின் மேலே…
ஆண் : மனதில் ஏதோ சலனம் சலனம்…
மழை வந்தாலே…

BGM

ஆண் : பாதக் கொலுசு கொஞ்சும் பாதம்…
என்ன பூச்செண்டா…
நான் தீண்டும் அங்கம் எல்லாம்…
தித்திக்கின்ற கற்கண்டா…

பெண் : பூவில் குடியிருக்க…
நீயும் என்ன பொன் வண்டா…
நான்தானே உன்னை என்னை…
சிந்திக்காத நாளுண்டா…

ஆண் : ஆகாயம் பொத்துக் கொண்டு…
தண்ணீர் விடும் போது…

பெண் : ஆகாய கங்கை செல்லும்…
கோட்டம் இங்கு ஏது…

ஆண் : ஒரு பாதி குளிர்ந்ததென்ன…
மறு பாதி கொதிப்பதென்ன…

பெண் : மானே நானே சரணம் சரணம்…
மடியின் மேலே…
மனதில் ஏதோ சலனம் சலனம்…
மழை வந்தாலே…

ஆண் : மானே நானே சரணம் சரணம்…
மடியின் மேலே…
மனதில் ஏதோ சலனம் சலனம்…
மழை வந்தாலே…

பெண் : ஊர் தூங்கும் ராத்திரி நேரம்…
இளமனதில் எத்தனை தாபம்…
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்…
இளமனதில் எத்தனை தாபம்…

ஆண் : நீராடு இளமையிலே…
சேவல் கூவும் வரையினிலே…

பெண் : மானே நானே சரணம் சரணம்…
மடியின் மேலே…
ஆண் : மனதில் ஏதோ சலனம் சலனம்…
மழை வந்தாலே…


Notes : Mane Nane Song Lyrics in Tamil. This Song from Sendhoorapandi (1993). Song Lyrics penned by Vaali. மானே நானே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top