மலரோடு பிறந்தவளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீமான்ஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம்தேவாஇனியவளே

Malarodu Piranthavala Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…

BGM

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

ஆண் : வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா…
கண்களிலே காதலர்கள் போர்க்களமா… ஆ…

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

BGM

பெண் : உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன்…
என் இரவினை நீளமாய் கேட்கிறேன்…

BGM

ஆண் : உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன்…
பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்…

பெண் : இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்…
தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்…

ஆண் : மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை…
பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்…

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

BGM

ஆண் : உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்…
நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்…

BGM

பெண் : வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்…
என் கண்களால் காதலை பேசுவேன்…

ஆண் : சந்தன சிலையா செய்தது மன்மத கலையா…
சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா…

பெண் : காதலே காதலே புது கவிதையா தாய்மடி…
வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே…

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…

பெண் : தாவணியே புல்வெளி பாய் மரமா…
காதலிலே தூதாக போய் வருவா… ஆ…

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…


Notes : Malarodu Piranthavala Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Seeman. மலரோடு பிறந்தவளா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top