பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | கரகாட்டக்காரன் |
Maanguyile Poonguyile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…
ஆண் : முத்து முத்துக் கண்ணால…
நான் சுத்தி வந்தேன் பின்னால…
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…
—BGM—
ஆண் : தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச…
வெங்கலத்துச் செம்பு…
அத தொட்டெடுத்துத் தலையில் வச்சா…
பொங்குதடி தெம்பு…
ஆண் : பட்டெடுத்து உடுத்தி வந்த…
பாண்டியரு தேரு…
இப்போ கிட்ட வந்து கிளருதடி…
என்னப் படு ஜோரு…
ஆண் : கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா…
பொண்ணு மனசத் தொட்டு பறிச்சா…
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா…
கண்ணு வலைதான் விட்டு விரிச்சா…
ஆண் : ஏறெடுத்துப் பாத்து… யம்மா…
நீரெடுத்து ஊத்து…
சீரெடுத்து வாரேன்… யம்மா…
சோ்த்து என்னைத் தேத்து…
ஆண் : முத்தையன் படிக்கும்…
முத்திரைக் கவிக்கு…
நிச்சயம் பதில்…
சொல்லணும் மயிலு…
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…
—BGM—
ஆண் : ஒன்ன மறந்திருக்க…
ஒரு பொழுதும் அறியேன்… யம்மா…
கன்னி மொகத்த விட்டு…
வேறெதையும் தெரிய…
ஆண் : வங்கத்துல வெளஞ்ச மஞ்சள்…
கெழங்கெடுத்து ஒரசி… யம்மா…
இங்குமங்கும் பூசிவரும்…
எழிலிருக்கும் அரசி…
ஆண் : கூடியிருப்போம் கூண்டுக் கிளியே…
கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே…
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்…
சம்மதமுன்னு சொல்லு கிளியே…
ஆண் : சாமத்தில வாரேன்… யம்மா…
சாமந்திப்பூத் தாரேன்…
கோவப்பட்டுப் பாத்தா… யம்மா…
வந்த வழி போறேன்…
ஆண் : சந்தனம் கரைச்சிப் பூசனும் எனக்கு…
முத்தையன் கணக்கு…
மொத்தமும் உனக்கு…
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…
ஆண் : முத்து முத்துக் கண்ணால…
நான் சுத்தி வந்தேன் பின்னால…
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…
Notes : Maanguyile Poonguyile Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. மாங்குயிலே பூங்குயிலே பாடல் வரிகள்.